யாரவன்!!!!

70 5 22
                                    

யாரவன்!
என் கோலங்களின் புள்ளிகளை களவாடி சென்றவன்..

யாரவன்!
என்‌ விடியாத இரவுகளின் விடிவெள்ளியானவன் ...

யாரவன்!
புலராத பொழுதுகளின் பனித்துளி ஆனவன்...

யாரவன்!
விழி தீண்டி என்னிடம் கதைகள் பல சொன்னவன்..

யாரவன்!
ரோஜாவின் நறுமணத்தை என்னுள் சேர்த்தவன்..

யாரவன்!
என் பெண்மையின் மென்மையை மயிலிறகால் வருடியவன்..

யாரவன்!
என் தொண்டைக்கும் இதயத்திற்கு நடுவில் கால்பந்தாடியவன்..

யாரவன்!
என் பேசாத மொழிகளுக்கு உரைநடையானவன்..

யாரவன்!
காதலினால் என்னை கைப்பாவை ஆக்கியவன்..

யாரவன்!
எழுதாத என் பக்கங்களின் கவிதைகளானவன்...

யாரவன்!
கண்கோர்த்து என்னுடன்‌ கண்ணாம்பூச்சி ஆடுபவன்...

யாரவன்!
கண்ணம்மா தேடும் பாரதியானவன்..

யாரவன்!
என்னுள் எனைத் தேடி தந்தவன்..

யாரவன்!
என் கேள்விகளின் எண்ணமானவன்..

யாரவன்!
என் உள்ளம் தனை களவாடி சென்றவன்...

யாரவன்!
என் கனவுகளின் கதாநாயகன் ஆனவன்..

யாரவன்!
தூங்கா இரவுகளில் துணையாக நின்றவன் ..

யாரவன்!
என் வார்த்தைகளை வற்ற செய்தவன்...

யாரவன்!
எனை கோழையாக்கி கொலோச்சியவன்...

யாரவன்!
தன் இடப்பக்கம் தந்து என் பெயரின் வலப்பக்கம் திருடுபவன்..

யாரவன்!
இதயத்தின் உயிர் துடிப்பானவன்...

யாரவன்!
என் தேடலில் விடையானவன்..

யாரவன்!
என் வெட்கத்துக்கு செம்மை
கூட்டுபவன்...

யாரவன்!
யாரவன்!
என்று எனை தத்தையாய் மாற்றியவன்..

யாரவன்!
ஒவ்வொரு விழிகளிலும் தேடுகின்றேன்...

யாரவன்!
மின்னலாய் வந்து என்னுள் பெரும்மழை பொழிந்தவன்..

யாரவன்!
யாரவன்!
யாரவன்!

என் வாழ்வின் பொருளானவன்....

குறிப்பு:-
நன்றி என் அன்புடை தோழமைகளே, நான் இந்த wattpad செயலிக்கு புதியவள்... ஒரு மாதத்தில் ஒராயிரம் பார்வைகள் என் கவிதையின்‌ மேல்.. மகிழ்ச்சியின் பூரிப்பில் இதோ 50கவிதைகள் தொட்டு விட்டேன்.. என் கவிதைகளை நேசித்து வாசியுங்கள்.. மீண்டும் மீண்டும் உங்கள் பார்வை வீச்சால் என் உந்ததல் சக்தியாய் திகழுங்கள்... நன்றிகள் கலந்த வணக்கத்துடன் உங்கள் தோழி :)

கவிதைகளின் ஊர்வலம்!!Where stories live. Discover now