முள்ளம் பன்றியை போல் பிறப்பெடுத்திருக்க மாட்டேனா?
என் மானத்தை யாவது காத்துக்கொள்ள
எங்களுக்கு மட்டும் ஏன் இத்துயரம் வேற்றுமை?
படைத்தவனும் ஆண் என்பதாலா?
உயிர் வலி அறிந்தோர் யாருமிலரே??
சிசு முதல் கிழவி வரை இதில் பேதமில்லை..
பெண் சிசு கொலை முதல் செத்து செத்து வாழும் பெண்ணினம்..
பெயர் மட்டும் தாய்நாடு,தாய்மொழி ...
ஆண் மகவு பெற்ற பெற்றோர்களுக்கு
ஒரு விண்ணப்பம்!!!
உங்கள் பிள்ளைகளை பார்த்து வளருங்கள் என்பதல்ல
உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வளருங்கள்!!!
ஏனென்றால் நாளை ஒருநாள் பெண்கள் இல்லயென்றால் அடுத்த
இலக்கு அவர்கள் தானே!!!
தனி மனித வன்கொடுமை அல்ல
பெண்ணிற்கு.. இது
அவளுக்கெதிரான சமுதாய கற்பழிப்பு!!!
ŞİMDİ OKUDUĞUN
கவிதைகளின் ஊர்வலம்!!
Şiirகவிதை ஓர் மனக்கண்ணாடி அதில் நான் விரும்பி ரசித்த பிம்பங்களில் சில !!!!