பெண்

67 10 4
                                    

பெண்,

கண்ணி சூடும் கன்னி மட்டுமல்ல கணினி உலகின் நிகண்டவள்

காந்தள் மலர் போல் மெல்லியாள்
காந்தம் போன்ற வல்லியாள்

மணம் தரும்  மலரவள்,பிறர்
மன ஓட்டம் உணர்ந்தவள்

அன்பின் பரிமாணங்கள் அறிந்தவள்
அன்ன பறவை அன்றோ தானவள்

எள்ளி நகையாடும் அறிவிலிகள் முன்னே
எள்ளளவும்  பின்வாங்காதவள்

மாதாமாதம் குருதி சிந்தினாலும்
மாரியை போன்ற தூயவள்

அணு அணுவாய் செதுக்கினாள் கருப்பையில்
அனுதினமும் ஆராதிக்காவிட்டாலும்
அன்புடன் ஆதரிப்போம் பெண்களை...

கவிதைகளின் ஊர்வலம்!!Donde viven las historias. Descúbrelo ahora