16 💕

3.2K 142 29
                                    

சாதனா மித்ரனின் அறையிலிருந்து கிளம்ப நினைக்கையில்.. "ஒரு நிமிஷம்.."என்ற மித்ரனின் குரலில் அங்கேயே நின்று அவனை பார்த்தாள் சாதனா.

"என் shirt ஒன்னு இங்க வச்சிட்டு போனது காணலை.. நீ பாத்தீயா.."என மித்ரன் கேட்டான்.

திருதிருவென விழித்தபடி.. என்ன சொல்வதென அறியாமல் நின்றாள் சாதனா.

"ரொம்ப லக்கியான shirt.. எங்கையாவது எடுத்து வச்சிடுவாங்க.. அம்மா.."என புலம்பியபடி.. சாதனாவை பார்த்த மித்ரன்.. "உனக்கு தெரியுமா.. தெரியாதா.."என சற்று எரிச்சலுடன் கேட்பது போல கேட்டான்.

"ஆங்.. தெ.. தெ.. தெரியாது.."என்ற சாதனா வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

"இன்னும் எவ்ளோ நாளைக்கு நீ என்கிட்ட இருந்து இப்டி ஓடுறன்னு பார்க்கலாம்.."என சிரித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

தன் அறைக்கு சென்று.. மித்ரனின் சட்டையை கையில் எடுத்துக் கொண்டு.. "நீ.. நீ.. மித்துவுக்கு லக்கி சர்ட் ஆம்.. ஆனா நான் எவ்ளோ அன்லக்கி.. மித்து.. நீ பேசாம விலகிப் போறத தாங்கிக்க முடியலை மித்து.. என்னால முடியலை.."என கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்தாள் சாதனா.

ஆனால் மித்ரனோ.. "எவ்ளோ அழகா இருக்க.. செல்லம்.. திருதிருனு நீ முழிக்கும் போது அப்டியே உன்னை கட்டிப்பிடிச்சு.. உம்.. வேண்டாம்.. அப்புறம் நீ என்னலாமோ பேசிடுவ.. என்னை எவ்ளோ பயமுறுத்தி வச்சிருக்கனு பாரு.. இதுக்கெல்லாம் உன்னை என்ன லாம் பண்றேனு பாரு.."என சாதனாவை நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த இரண்டு நாட்களும் சாதனாவை கண்டு கொள்ளாதவன் போல நடந்து கொண்டான் மித்ரன்.

சாதனாவுக்கு அவன் அப்படி நடந்து கொள்வது வருத்தமாக இருந்தது.

ஊரிலிருந்து திரும்பி வந்த மித்ரன்.. வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

பத்து நாட்களுக்கும் மேல் கடந்திருந்தது..   மித்ரன் சாதனாவின் டைரியை எடுத்தான்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now