சாராவை நோக்கியவன் "எங்க டி போன ?" என கேட்க
அமைதி காத்தாள் அவள்.
"ஏய் கேட்குறேன்ல சொல்லுடி எங்க போன?" என்றான் மீண்டும்.
அதற்கும் எதுவும் சொல்லவில்லை என்றதும்
"தனியா தான் வந்தியா?" என்றான்.
இல்லை என தலையசைக்கவே
"அப்போ யார் கூட வந்த ?!" என்றான்.
அதற்கு அவள் மெதுவாக கையை வெளியே நோக்கி காட்ட வெளியே சென்று எட்டிப் பார்த்தவன் ஷான் ஐக் கண்டதும் பொங்கி எழுந்த கோபத்தால் "பொருக்கி ராஸ்கல்" என வாயால் முனுமுனுக்க
அவன் வாயசைவைக் கவனித்த ஷான் "யாருடா பொருக்கி?! எங்க வீட்டு பொண்ண உன்ன நம்பி அனுப்புனா பார்த்துக்கிற லட்சனம் தான் இதுவா?!" என்றான் பதிலுக்கு
உடனே "சாரா" என சத்தமிட அவன் அருகில் வந்து நின்ற சாராவைப் பார்த்து இந்த பொருக்கி கூட தான் வந்தியா நீ?! என்றான் இன்னுமொரு முறை
"டேய்" என கத்தியபடி அவனை அடிக்க பாய்ந்த ஷான் ஐ
" ஹேய் ப்ளீஸ் கொஞ்சம் இருடா" என தடுத்த சாரா"என்ன பேசுற அஹமட் நீ அவன் என்னோட மாமா பையன் நான் உன் முன்னாடி மறுபடியும் நிற்கிறேன்னா அதுக்கு காரணமே அவன் தான் அது தெரியுமா உனக்கு ? மைன்ட் யுவர் வர்ட்ஸ்" என்றாள்.
"என்னது இவன் உன் மாமா பையனா அதானே பார்த்தேன் குடும்பமே ப்ரோடு குடும்பம் இவனால தான் என் தங்கச்சி இன்னைக்கு இந்த நிலைல இருக்கா அது தெரியுமா உனக்கு ?"
"டேய் என்னடா சொன்ன ப்ரோடு குடும்பமா?! உன்னோட குடும்பம் மட்டும் நல்லதோ கட்டின பொண்டாட்டிய ஒழுங்கா பார்த்துக்க முடியல நீயெல்லாம்..." என சொல்ல
அடிக்க பாய்ந்தான் அஹமட்.
இருவருக்கமிடையில் நின்று கொண்டு இருந்த சாரா "நிறுத்துங்க" என காதை பொத்தியபடி கத்த
விலகி நின்றான் ஷான்.
அவனை விளித்தவள் "டேய் ஷான் ப்ளீஸ் போயிடுடா " என சொல்லவே
DU LIEST GERADE
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
Romantikஅறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..