பகுதி - 28

1.6K 101 18
                                    

இதைக் கேட்டதும் வாயைப் பிளந்த படி பார்த்துக் கொண்டு இருந்தாள் சாரா.
தன் கைகளைக் கொண்டு அவள் வாயை மூடி விட்டாள் ஷனா.

பின்பு தன்னை கட்டுப்படுத்தியவளாக "என்னடா சொல்ர..நீயா இப்டிலாம் பண்ண என்னால நம்பவே முடியலயே நான் வீட்ல இருந்தப்ப ஏதோ சின்ன பசங்களோட சேர்ந்து விளையாடிட்டு இருப்ப இல்லனா சுமி கூட சண்டை போட்டுட்டு இருப்ப..நிஜமா நீ தான் இப்டிலாம் பண்ணியா"என்றாள் சாரா.

"சாரா உனக்கு இந்த ஷான் பற்றி சரியா தெரியல அதான் இப்படி பேசிட்டு இருக்க..சுமி கூட சண்டை போட மட்டும் தான் என்னால முடியும்னு நினச்சிட்ட போல..இதோ பாரு என்னை பற்றி நல்லா தெரிஞ்ச பொண்ணு நான் சொல்ரத எல்லாத்தையும் கேட்டுட்டு எப்படி அமைதியா இருக்கு"

"டேய் நீ வேற நானே வாயடச்சு போய் இருக்கேன்...சத்தியமா சொல்ரேன் சாரா நான் நம்பி இருக்கவே மாட்டேன் ஏதோ கீழ வச்சு ஷீமா ஆல்ரெடி சொன்னதால நம்புறேன்" என்றாள் ஷனா.

"என்ன ஷனா இப்படி சொல்லிட்ட...போடி உங்கள எல்லாம் மதிச்சு உங்ககிட்ட சொன்னேன் பாரு"...என்ற ஷான்

"ஆமாம் சாரா எங்க ரெண்டு பேரோட ஸ்டோரி உனக்கு எப்படி தெரியும் "என்றாள்.

"அது நான் தான் ஹன்னா கிட்ட சொல்லி சொல்ல சொன்னேன் அப்போ தானே அவங்களால ஹெல்ப் பண்ண முடியும்"என்றாள் ஷனா.

"ஷான் அன்றைக்கு அஹமட் ஏன் உன்கிட்ட அவ்வளவு கோபப்பட்டான்னு எனக்கு புரியல பட் இப்போ தான் தோணுது அவன் கோபம் சரியானது தான் ஆனா அத அவன் யாருகிட்ட காட்டனும் தெரியாம கோபப்பட்டுட்டான் யாராக இருந்தாலும் தங்கச்சிக்கு ஒன்னுனா இப்படி தான் பண்ணுவாங்கள்ல இப்போ நீ கூட பாரு உன் தங்கச்சிய பிரச்சினைல இழுத்ததும் தானே கோபப்பட்டு இவ்வளவும் பண்ணிருக்க"

"ஆஹ் அது என்னமோ சரி தான் சாரா..அத்தோட எனக்கு அஹமட் மேல எந்த கோபமும் இல்ல அண்டன் போய் அவருகிட்ட என்னய பற்றி தவறா சொன்னதனால தானே அவரு கோபப்பட்டாரு..இப்போ நாளைக்கே அது எல்லாம் பொய்னு தெரிஞ்சா எல்லாம் சரி ஆய்டும்" என்றான் ஷான்.

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now