"இந்த சுமி அன்டைக்கு அந்த டைரியை கொஞ்சம் காட்ட சொன்னதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆனா...ஏதோ ஒன்னு சரி இல்லையே
இப்போ அவ வீட்ல இல்லாத நேரம் ஸோ இதான் கரெக்ட் டைம் எப்படியாச்சும் அந்த டைரில என்ன இருக்குன்றத பாத்துடனும்" என எண்ணிய ஷான்"இருடி உனக்கு இருக்கு" என்றபடி அவள் அறைக்குள் புகுந்து கொண்டான்.
இதை கண்ட அமீரா "ஷான் நீ எதற்கு அங்க போற அப்றொம் அவ ஸ்கூல் விட்டு வந்து அதை காணோம் இதை காணோம்னு வீட்டையே சந்தையா மாத்திடுவா தெரியும்ல" என அறிவுறுத்தினாலும்
"விடுமா நான் பார்த்துக்கிறேன்" என தைரியமாக தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்தான் ஷான்.
"அதுல அப்படி என்ன தான் இருக்கும்" என்ற யோசனை அவன் மண்டையை குடைந்து எடுத்தது.
அரை மணி நேரமாக தேடியும் அவள் எங்கே பதுக்கி வைத்து இருக்கிறாள் என இவனால் கண்டு பிடிக்க முடியவில்லை
அவனுக்கோ தேடுவதை விட எண்ணமில்லை "எங்க வச்சிருப்பாள்" என ஒரு கணம் அமைதியாக யோசித்ததன் விளைவாக அவனுக்கு ஒரு இடம் நியாபகம் வந்தது.
உடனே அவள் புத்தக இறாக்கையை நெருங்கியவன் அத்தனை புத்தகங்களையும் எடுத்துப் போட்டு தேட ஒருவாராக அவன் கண்களில் பட்டது அந்த சிவப்பு நிற டைரி.
உடனே அதை எடுத்து அதை திறந்து பார்த்தவன் ஒவ்வொரு பக்கமாக புரட்ட புரட்ட ஆச்சரியம் அவன் கண்களில் சூழ்ந்து கொண்டது.
"இன்டைக்கு இவ வரட்டும்..." என கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கீழே போய் ஸோபாவில் அமர்ந்து கொண்டவன் அவள் வருகைக்காக காத்திருந்தான்.
இதற்கிடையில் சாப்பிட வா வா என நச்சரித்துக் கொண்டே இருந்தார் அமீரா.
"எனக்கு ஒன்றும் தேவை இல்லை விடேன்" என அவன் கத்தியது அமீராவிற்கு ஏதோ சரியில்லை என புரிய வைக்க
"என்ன ஆச்சு ஷான் ?" என வினவியபடியே அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
YOU ARE READING
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
Romanceஅறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..