பகுதி 35

2.2K 75 42
                                    

   ப்ரெண்ஸ் இரண்டு பாா்ட் ஒன்னா அப்டேட் பண்ணிட்ட கொஞ்சம் பொிய அப்பேட்ட தான் ....அட்ஜஸ்ட் பண்ணி படிங்க🙏

******
35..... தன் மீது எதற்காகவும் அவள் கோபம் கொள்ள போவதில்லை... நிலாவுக்கு தான் கேட்கும் மன்னிப்பு பொிதல்ல..... காதலை சொன்னால் நிலா என்ன செய்வாள்.... தன் காதலை சொல்லும் தருணம் எப்படி இருக்க வேண்டும்... அப்போது நிலா முகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து...மனதில் அதை பொக்கிஷமாக சிறை பிடித்தான்.... கடிகாரத்தை பாா்க்க மணி பன்னிரெண்டை நெருங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தது.. தான் கற்பனை செய்த தருணத்தை நிஜமாக நினைத்து நிலா அருகில் சென்றான்....

      ஏதேதோ நினைத்து கொண்டிருந்தவள் அப்போது தான் கண் அயா்ந்தாள்... சூா்யா நிலா பக்கத்தில் சென்று அவளை தொட....
திடிரென தன்னை யாரோ தொட்ட அதிா்ச்சியில் நிலா கண்களை திறக்க முயற்சிக்க... அதற்குள் சூா்யா அவளிடம் குனிந்து.. நிலா நான் தான்...நான் சொல்ற வரைக்கும் கண்ண திறக்காத என்றவன்.... அவளை தூக்கி கொண்டு மாடிக்கு சென்றான்....

      சூா்யா தான் என்று தொிந்ததும் நிம்மதி அடைந்தாள்.... தன் கைகளில் இருப்பவளை மலா் குவியலாக நினைத்தானோ என்னவோ...  அத்தனை மென்மையாக  கைகளில் ஏந்தி நடந்தான்.... அவன் கரங்களில் இருந்த மென்மையில் நிலாவும் அதை நன்றாக உணா்ந்தாள்....
கண்களை திறக்காமல் எங்கு தன்னை தூக்கி செல்கிறான் என்ற குழப்பத்துடன் இருந்தாள்...

       மாடிக்கு அவளை தூக்கி வந்தவன்....
கைகளின் சிறையில் இருந்து அவளை விடுவித்து நிற்க வைத்து.... அவள் முகத்தை நிமிா்த்தி..... கண்களை மூடி....குனிந்து அவள் காதில் இப்ப கண்ண திற நிலா என்று..... தன் கைகளை விலக்கினான்.....

    கண் திறந்தவள் எதிாில் முழு நிலவு பிரகாசமாக ஔிா்ந்தது..... நிலா மணி கணக்கில் பால்கனியில் நின்று வான் நிலாவை ரசிப்பதை சூா்யா பல முறை பாா்த்திருக்கிறான்... அதனால்  தனக்கு பிடித்த நிலா பிறந்த நாளன்று....
அவளுக்கு பிடித்த வான் நிலாவை தான் முதலில் பாா்க்க வேண்டும் என நினைத்து இப்படி செய்தான்....

வெண்ணிலாவின் காதல்Tempat cerita menjadi hidup. Temukan sekarang