காலைப் பகலவன்
கதிரொளியால்
கண்கள் வருடி
உறக்கம் கலைத்தான் ,
வெறுமை நிறைந்த
நாளுக்கோர்
விடியல் ஏனோ ?
என்றிருந்தது , ஜீவிகாவிற்கு ...செந்திலின் இல்லம்
காலைக் காற்றை
இதமாய் சுகித்துக்கொண்டே
சற்றுப் பரபரப்பையும் பற்றிக்கொண்டிருந்தது ,காலை உணவு முடிந்து செந்திலின் வீட்டிலிருந்து அனைவரும் கிளம்ப ஆயத்தமாக , ஜீவி ஏனோ இங்கிருந்து அசைவதற்க்குக் கூட மனமில்லாமல் மொபைலை நோண்டியவாறு , அமர்ந்திருந்தாலும் , அவள் மனதில் கேள்வியும் பதிலுமாய் , மாறி மாறி எண்ணங்கள் அலைக்கழித்தது ,
"எப்படியும் இன்று ஜெயராம் மாமா , கார்த்தி மாமா செந்து , என அனைவரும, கிளம்பினாலும் , நாளை அத்தை , பாட்டியுடன் திருப்பூர் போக வேண்டும் , எப்படிப்போவது ?
செந்துவின் பாசத்தில் பரிதவிக்கும் மனதின் அமைதிக்கு வழி ?திருப்பூரில் தானிருந்த இனிப்பான , நொடிகளால் ஆன இன்பமான நாட்கள் , அன்பை அள்ளித் தரும் அத்தை , மாமா ,
பாசத்தை கொட்டித்தரும் பாட்டி தாத்தா ,அக்கா அக்காவெனவே தன் கைக்கோர்த்துத் திரியும் , மாமன் மகள்கள் , மாமர அணில்கள் , மரங்கொத்திப் பறவைகள் , மலர்கள் படர்ந்த மதில் சுவர்கள் , என மலர்ந்த நினைவுகள் , அனைத்தையும் ,
தாண்டி செந்தூரன்......செந்தூரன் கம்பனி வேலைகளுக்காய் அசராமல் உழைத்தாலும் ,
குடுமபத்திலும் தாத்தா பாட்டியின் தேவையறிந்து சேவை செய்து , தங்கைகளை தன் எல்லைக்குள் வைத்து வழிநடத்தி , தான் காதலிப்பவளுக்காய் நேரம் செலவழித்து , என அத்தனை வேலைகளுக்கும் இடையில் அவன் என்னை எந்த நேரமும் , நினைத்து என்மீது அக்கறை செலுத்தி அன்பைக் காட்டி இருக்கிறான் ,எனக்குப் பிடித்த உணவை சமைக்கச் சொல்லித் தருவிப்பதில் தொடங்கி , ஆடைகள் , காமிரா , லேப்டாப் , ட்ராயிங் மெட்டீரியல் , என் தேவையைத் தான் அறியும் முன்பே , அவன் அறிந்து பூர்த்தி செய்திருக்கிறான்,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...