வியாழக் கிழமை ,
கொல்கட்டா ,
ஹோட்டல் ஒபராய் க்ரேன்ட் ,
காலை மணி 9 ,
செந்தூரன் எதிர்பார்பாய் காத்திருந்தான் அவளுக்காக ,
ஆம் , அவளுக்காக ...காதலால் நெய்த
இதயம் கொண்டு
கருணையால் செய்த
கண்கள் இரண்டால்
இவனைக்காண வருபவள் ,அவள் வருவதற்குள் , அலைபேசியில் அவளை நிமிடத்திற்கொரு முறை அழைத்துவிட்டான் , அவள் ஃபோன் சுவிட்ச் ஆஃப் , மனம் தவிக்க ஆரம்பித்தது , ஏன் தாமதம்... ?
அவள் வரவேண்டிய திசை பார்த்துக் காத்துக் கொண்டிருந்த செந்தூரனின்
விழிகள் மோட்சம் பெற்றது ...
இதோ , அவள் வந்துவிட்டாள் ,
நொடிகள் ஓடியது ,
பார்வைகளோ ஸ்தம்பித்தது..
அவளே மெளனம் உடைத்தாள்.." சாரி செந்து .. உன்னைக் காத்திருக்க வச்சுட்டேன் ... சாரி... "
அவன் பதிலேதும் மொழியவில்லை
அவளின் சாரியில் சமாதானம் ஆகாமல் அவளின் கண்களை தீர்க்கமாய் நோக்கினான் ," அப்படிப் பார்க்காத .. நான்தான் சாரி சொல்றேன்ல ... ப்ளீஸ் சற்றே கெஞ்சினாள்... "
மீண்டும் பார்வையை நீட்டித்தான்...
" என்ன செந்து நீ ... , புரிஞ்சுக்கோ ... கிளம்பும் போது ஃபேக்ட்ரி மேனேஜர் கால் பண்ணீட்டார் ப்ரொடக்சன் ப்ராப்ளம்னு , அதான் லேட் , திரும்ப கால் பண்ணிடுவாங்கன்னு , ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணீட்டேன் , ப்ளீஸ் சாரி மா.. என்றாள் "
ESTÁS LEYENDO
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
Ficción General🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...