வர்ஷித், டைரியில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அவனின் காதலி தான் என்பதை புரிந்துகொண்டாள் வர்ஷித்தின் அம்மூ. அவள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆதிகாவின் சிறு வயது போட்டோ ஒன்றை டைரியின் கடைசி பக்கத்தில் இடம் பெற்று, சந்தேகத்தை தீர்த்து தெளிவான பதிலை, கையில் தந்தது வர்ஷித்தின் அம்மூ, ஆதிகா தான் என்று.மேல சென்ற வர்ஷித், தன் மேல் உள்ள கோபத்திலும், அவள் முகத்தில் எப்படி முழிப்பது என்ற குற்ற உணர்விலும் கீழே வராமல் மொட்டை மாடியிலே படுத்துகொண்டான். 'தான் மட்டும் அவள் மீது காதல் வைத்தால் போதுமா? அதற்காக இப்படியா அவள் அனுமதி இன்றி செய்வது? அவள் என்னை காதலிக்க வில்லையே, இதை எப்படி ஏற்று இருப்பாள்? அவள் மனம் புண் பட்டிருக்குமே. என்னை என்ன நினைத்திருப்பாள்? கண்டிப்பா என் தேவைக்கே அவளை தொட்டேன் என நினைத்துவிட்டால்.... அட கடவுளே ஏன் என்னைய ரொம்ப சோதிக்கிற? இதுக்கு ஒரு சீக்கிரமா முடிவு கட்டணும். அவளோட நிம்மதிய நானே பறிச்சிட்டேனே' என தன்னை தானே திட்டிக்கொண்டே கண் அயர்ந்தான்.
அவளுக்கு வர்ஷித் காதலித்ததை நினைத்து அதிர்ச்சி என்றால் தன்னையே காதலித்தது தான் பேரதிர்ச்சி.
இதனை படித்து முடித்தவளுக்கு இனிமேல் வர்ஷித் தனக்கு மட்டுந்தான். அவருடைய காதலும் தனக்கு தான் என நினைத்து ஆனந்தம் கொள்வதா? அல்ல தன்னால் இவ்வளவு வலியை வாழ்வில் சந்தித்திருக்கிறான் என்பதை நினைத்து வருத்தம் கொள்வதா? இத்தனை காதல் என்மீது வைத்துவிட்டு இவ்வளவு ஒதுக்கம் காட்டுவது எதற்கு? விஷ்ணுவை விரும்பியதால் தன்னை வெறுக்கிறாரோ? தன்னை இனிமேல் ஏற்கமாட்டாரோ? என பல கேள்விகள் அவளுள் எழும்பியது, சற்று நேரம் முன்னால் அவன் செலுத்திய அன்பை மறந்து.
தன் வாழ்க்கையில் தனக்கு தெரியாமலே, தன்னால் ஒருவன் கஷ்டப்பட்டிருப்பது எவ்வளவு வேதனையை தரும் என்பதை அப்போது உணர்ந்தாள் ஆதிகா.
என்ன ஒரு வகையான காதல் இவனது? நான் சந்தோசமாக உள்ள வரை அவனது காதல் வாழுமாம். இதை நினைக்கும்போதெல்லாம் அவள் பூரித்துப்போனாள். இவன் ரத்தம் கொடுத்ததை நினைக்கையில் மேலும் உடல் சிலிர்த்து போனாள். ஆனந்த கண்ணீரும் இதில் பங்கெடுத்துக்கொண்டது.
YOU ARE READING
என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
Romanceபெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?