மாயம்: 28

2.8K 99 23
                                    


ஆதிகா கருவுற்று சில மாதங்கள் கடந்திருந்தது. ஆதிகா, வீட்டில் உள்ளோரின் கவனிப்பிலும் அன்பிலும் தன்னவன் தன் மீது கொண்ட காதலிலும் அவள் பூரிப்பு அடைந்திருந்தாள். நடுராத்திரியில் எழுந்து பசிக்கிது என்றாலும் முகம் சுழிக்காமல் சமைத்து தருவான்.

அன்றும் அதுபோல தான் வர்ஷித் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தான். ஆதிகா அவன் தேவையை எல்லாம் மெதுவாக பூர்த்தி செய்துகொண்டிருந்தாள். கடைசியில் அலுவலகத்திற்கு கிளம்பும்போது ஆதிகாவிடம் சொல்லிவிட்டு கீழே குனிந்து மேடிட்ட வயிறே தன் உலகம் என உயிர்வாழும் தன் சிசுவிடம் "மலர்மா அப்பா ஆபீஸ் கிளம்பிட்டேன் அம்மாவ பாத்துக்கோங்கடா,  போயிட்டு வரட்டா... எங்க பாய் சொல்லுங்க" என வயிற்றில் கை வைத்து சொன்னவன் எழ போகையில் சிசுக்கு முத்தமிட,  தான் வளர்ந்துவிட்டேன் என்பதை தெரிவிக்க வர்ஷித்தின் உயிர் ஆதிகாவின் வயிற்றுக்குள்ளிருந்து,  எங்கே அம்மாவுக்கு வலிக்குமோ என்ற பயத்தில் மெல்ல கை கால்களை அசைத்தது. அதனை உணர்ந்த இருவருக்கும் எல்லையில்லா ஆனந்தம். அந்த தருணத்தை மூளையில் பதியவைத்துக்கொண்டனர்.

அதன் பிறகு, வர்ஷித் மலர்மா என ஆரம்பித்தாலே குழந்தை தன் அசைவை காட்டும். இதை பார்வையாளராக பார்க்கும் ஆதிகா, "கண்டிப்பா உள்ள இருக்குறது மலர்மா தான்டா,  உங்க அம்மாவே உன்ன பார்க்க திரும்பி வர போறாங்க" என சொல்லி  அவனை அணைத்துக்கொள்வாள். 

ஒருநாள்  அவசரமாக ஒரு மீட்டிங் காரணமாக வர்ஷித்தே சென்னை போகும் நிலைமை வந்தது. ஆதிகா எவ்வளவு தடுத்தும் வர்ஷித் கிளம்பினான். அவளும் வர்ஷித்தை அரை மனதோடு அனுப்பி வைத்தாள். ஆதிகாவிற்கு ராகேஷை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. வர்ஷித்தும் ஆதிகாவை பிரிய மனமில்லாமல் பிரிந்து,  பெற்றோர்களிடம் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறி சென்றான்.

வர்ஷித்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க ஒரு வேலை செய்ய வேண்டும் என திட்டம் ஒன்று போட்டிருந்தாள். அதை அவன் இல்லாத மூன்று நாட்களில் செய்தாள். அவனும்  அவளுடன் இல்லாத குறை ஒன்றுதான் குறையே தவிர,  மணிக்கொருமுறை இவனை நியாபகப்படுத்தும்படி ஒரு போன் கால் வர்ஷித்திடமிருந்து ஆதிகாவிற்கு வந்துவிடும்.

  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)Where stories live. Discover now