Intro :
PS family : same
MULLAI family : same
Relationship : changed
பார்வதியும் பாண்டியனும் அண்ணன் தங்கை, பார்வதி, திருமணம் அன்று வெளியே போய் முருகனை திருமணம் செய்து கொண்டதால் பாண்டியன் வெறுத்து ஒதுக்கி விட்டார்....
பாண்டியன் இறப்பதற்கு முன் பார்வதியை சேர்த்து கொள்ள வேண்டும் என நினைத்து இருந்தார், ஆனால் lak இடம் சொல்லவில்லை. திடீரென்று ஒரு நாள் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார், பார்வதி வந்தார், உறவினர்கள் விடவில்லை, lak பேசும் நிலையில் இல்லை...
(Note: பாண்டியனுக்கு diary எழுதும் பழக்கம் உண்டு)
மூர்த்தி, ஜீவா, கதிருக்கு பார்வதியை தெரியும். பாண்டியன் இறப்பிற்கு பின் பார்வதி உதவ வந்தார், ஆனால் lak மறுத்து விட்டார், கோவத்தினால் அல்ல, பெண் பிள்ளையின் புகுந்த வீட்டில் இருந்து உதவி வாங்குவது முறை ஆகாது என்பதால், அதோடு இயல்பாக சேர்த்து கொள்ளவும் இல்லை, பாண்டியனின் அண்ணன் (பாப்பா தாத்தா) ஒத்து கொள்ளவில்லை, வீட்டின் மூத்தார் சொல்வதை மீறி எதுவும் செய்ய கூடாது என்பதால்.. ..
ஜீவா கதிர் படிக்கும் அதே பள்ளியில் தான் முல்லையும் படித்தாள், கதிரும் ஜீவாவும் முல்லையுடன் விளையாடுவார்கள், அன்பாக பார்த்து கொள்வார்கள், முல்லைக்கும் இவர்களை பிடிக்கும்...
காலம் கடந்தது, கதிர் 10 ஆவது முடித்ததும் கடைக்கு சென்றான், முருகனும் பார்வதியும் கதிரை வழியில் சந்தித்து படிக்க வைப்பதாக கூற, இந்த அன்பு போதும் வேறு எதுவும் வேண்டாம் என கதிர் மறுத்து விட்டான்...
அவ்வப்போது முல்லை கதிர் ஜீவாவை சந்தித்து பேசுவாள், அதோடு கடைக்கும் சென்று வருவார், அனைவர்க்கும் முல்லையை பிடிக்கும் என்றாலும் வீட்டுக்குள் சகஜமாக வந்து போகும் அளவு ஏற்று கொள்ள வில்லை...
கடைக்கு முல்லை வரும் போதெல்லாம் கதிருடன் வம்பு செய்வாள்...