One shot:
KM room: dec 12, இரவு 10 மணி
M: நீ... நீங்க எதுக்கு உள்ளே வர்றிங்க
K: இது என் வீடு நியாபகம் இருக்கட்டும்
M: நான் இருக்குற room குள்ள வந்ததால தான் நான் கேட்குறேன்..
K: சாயங்காலமே எல்லார் முன்னாடியும் சொன்னேன், நாங்க அதே room ல இருந்துக்குறோம் னு, அப்ப பேச வேண்டியது தானே, அதோட அண்ணன் அண்ணி சொன்னதால தான் வந்தேன்...
M: அண்ணன் சொன்னாங்க அண்ணி சொன்னாங்க னு கிட்ட வந்திங்க கொன்னுருவேன்...
K: கொன்னுட்டு என்ன செய்வே...
M: முறைக்க
K: என்னடி செய்வே என சொல்லி அருகே வர
M: கண்ணில் கோவத்துடனும் கண்ணீருடனும் பார்க்க
K: தாலி கட்டும் போது இதை சொல்லிருக்கணும், அப்ப ஏன் அமைதியா இருந்தே...
M: முருகனின் முகம் முன்னே வர, பேச வார்த்தையின்றி நின்றாள்...
K: நீ எப்படி உன் அப்பக்காக இதை ஏத்துக்கிட்டையோ, அதே போல தான் நானும், தேவை இல்லாம பேசினே அவ்வளோதான்...
M: என்ன செய்விங்க, அடிப்பீங்களா, oh பழி வாங்க தானே கல்யாணம் பண்ணுணிங்க...
K: பழி வாங்கவா
M: ஆமா, உங்களுக்கு என்னையும் என் குடும்பத்தையும் பிடிக்காது, இப்ப என்னை வெச்சு என் அப்பா அம்மாவை பழி வாங்க திட்டம் போடறீங்க...
K: எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல, உனக்கு இப்படி தோணுதுன்னா உன் எண்ணம் தான் அப்படி இருக்கு போல....
அப்ப நான் நினைச்சது சரி தான், நீ இந்த வீட்டுக்கு வந்தா இந்த வீட்டோட நிம்மதி போய்டும் னு நினைச்சேன், சரி தான், நீ நினைச்சது நடக்கல, அடுத்து நீயும் உன் அப்பாவும் plan பண்ணி உன் கல்யாணம் முடிச்சுட்டு, உன் அம்மா, அத்தாச்சி யோசனை படி இந்த குடும்பத்துல பிரச்சனை பண்ணி பிரிக்க திட்டம் போற்றுகீன்க...
M: என் அப்பா அம்மாவை தப்பா பேசாதீங்க...
K: அப்படி தான் பேசுவேன், என்ன பண்ணுவே, நான் பாட்டுக்கு இருந்தேன், விட்ருந்தா தூங்கி எழுந்து போயிருப்பேன், நீ தானே ஆரம்பிச்ச்சே..