❤ சிறுநகை 56

375 29 8
                                    

"அதெல்லாம் அப்புறம் பேசு; இப்டி உன் ரூமுக்கு ஆப்போஸிட்லயே எனக்குப் பிடிச்ச மாதிரி, கம்பர்டபிளா ரூம் ரெடி பண்ணி குடுத்துருக்கியே? நான் அப்பப்ப கோவிச்சுக்கிட்டு இங்க வந்து டோர் லாக் பண்ணிக்கிட்டு படுத்துட்டா என்ன பண்ணுவ?" என்று கேட்டவளின் இடையை இறுக்கி அவன் மார்புடன் அணைத்துக் கொண்டவன்,

"இப்டி வேற ஒரு ஐடியா இருக்கா உனக்கு? நீ இங்க வந்து தனியா லாக் பண்ணிட்டு படுக்குறதுக்கு டோர் இருக்கணும்ல செல்லம்? நீ இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சா அப்புறம் நான் இந்த ரூமோட கதவ மட்டும் கழட்டி வச்சுடுவேனாக்கும். அது பாட்டுல நமக்கு இடைஞ்சல குடுக்காம ஒரு ஓரமா கெடக்குது......!" என்று அவளிடம் அசட்டையாக சொன்னான்.

அவனது முடிக்கற்றைகளுக்குள் விரல்களை விட்டு சுழற்றிக் கொண்டிருந்தவள் அவனுடைய பேச்சில் கடுப்பாகி தன் விரல்களில் இருந்த அவனுடைய முடிகளின் வேர்களை பிடித்து இழுக்க அவன் வலியில் லேசாக உச்சுக்கொட்டினான்.

"ஏன்டா இப்டியெல்லாம் யோசிக்குற?" என்று அவனிடம் கேட்டவளிடம்,

"நீ இல்லாம கதிருக்கு கல்யாணமும் இல்ல; வம்ச விருத்தியும் இல்லன்னு எங்கம்மா உங்கிட்ட சொன்னாங்கல்ல? நீ இங்கயும், நான் எதித்தாப்ல இருக்குற ரூமுக்குள்ளயும் இருந்தோமுன்னா எங்கிட்டு இருந்து வரும் வம்ச விருத்தி?
நான் இல்லாதப்ப நீ நிம்மதியா ரெஸ்ட் எடுக்கத்தான் உனக்குப் பிடிச்ச மாதிரி இந்த ரூம்! நான் உங்கூட இருக்கறப்ப இங்க ஓடியாரணும்னு நெனச்ச.....? நெனச்சுத் தான் பாரேன்! அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும்!" என்று சொன்னவனை புன்னகைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தானலஷ்மி.

"எனக்கு உங்கப்பா பேசுனத கேட்டதுல இருந்து ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருக்கு! ரூமுக்குள்ள போயி அமைதியா ஒக்காந்துருந்தா, கோபம் போயிடுமான்னு பாத்தாலும் அவர் பேசுன பேச்சே திரும்ப திரும்ப மூளைக்குள்ள சுத்திட்டு இருக்கு! உன்னை விட்டுட்டு கிளம்புறேன்னு சொன்னா நீ ஒருபக்கம் டென்ஷன் ஆகுற! நம்ம ரெண்டு பேரோட இந்த மூடையும் சரி பண்றதுக்கு என்ன பண்ணலாம்? நீயே சொல்லு!" என்று கேட்டாள் சந்தானலஷ்மி.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now