தொடர்வண்டிக்காகவும் அவனுக்காகவும் காத்து கொண்டு இருக்கின்றேன்!என்னவனும் வரவில்லை, என் தொடர்வண்டியும் வரவில்லை! நான் மனதுக்குள் என்னவனுக்கான காதல் ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கின்றேன்!இதே நிலையத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எனது வேலையை முடித்து விட்டு அவசர அவசரமாக விரைந்து வந்தேன். ஏனெனில் இன்னும் ஐந்து நிமடத்தில் என் வண்டி புறப்பட உள்ளது!
இறுதியாக மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க,எனது வண்டிக்கு சரியான நேரத்திற்கு வந்து அடைந்தேன். இரவு 10 மணி என்பதால் எனது இரயில் பெட்டியில், எனக்கு அருகாமையில் இருக்கும் அனைவரும் உறங்கிவிட்டனர். எனது இருக்கை, மேல் இருக்கை ( upper berth).
எனதும், எனக்கு எதிரில் இருக்கும் இருக்கை மட்டும் காலியாக இருந்தது! அனைவரும் உறங்கிவிட்டதால் நானும் உறங்க முடிவு எடுத்தேன்!
10 நிமிடமாக உறங்க முயற்சி செய்தும் ஏனோ நித்திர தேவி என்னை வந்து அடையவில்லை! என்னவாக இருக்கும் என்று சிந்தனையில் இருக்கும் போது "கட முடா கட முடா" என்று ஒரு சத்தம், இது என்னது இரயில் சத்ததுடன் சேர்ந்து புதியதாக ஒரு சத்தம்! எங்கு இருந்து வருகிறது?
"ஒரு வேலை இரயில் வண்டி பழுது ஆகி விட்டதோ என்று அஞ்சினேன்! ஐயோ அது உண்மையாக இருந்தால் நான் இறக்க போகிறேனா? அப்படி என்றால் இனி நான் ஆசைப்பட்ட கொரியன், ஆங்கில தொடர் நாடகங்கலை காண இயலாதோ? எனக்கு ஆசைப்பட்ட கதைகளை மணிகணக்காக படிக்க இயலாதோ? என், கனவு இளவரசனை இனிமே கானவே முடியாதோ?" என்றெல்லாம் என் சிந்தனை ஓடி கொண்டிருக்க, மீண்டும் அதே சத்தம் "கட முடா.. கட முடா" என்று கேட்டது!சத்தம் எங்கு இருந்து வருகிறது, என்று கவனிக்க தொடர்ந்தேன்! இரண்டு வினாடிகள் பிறகு அது என் வயிற்றில் இருந்து தான் வருகிறது, என்று தெரிந்தவுடன் என் மட தனத்தை நானே செல்லமாக திட்டி கொண்டேன்!
வயிற்றிலிருந்து வரும் சத்தத்தை அமைதிப்படுத்த இரயில் வண்டியில் சிற்றுண்டி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்!
BẠN ĐANG ĐỌC
தமிழ் களஞ்சியம்
Truyện Ngắnதுளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல... சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து, வர்ணங்களாக உருவெடுத்து, கதைகளாகத் தீட்டப்பெற்று, புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து...