நெடுந்தூரம் ஒரு பயணம் உன்னோடு போக வேண்டுமடி
என் தலை சாய்ந்து உன் மடி மீது அந்த நிலவை ரசிக்க வேண்டுமடி
என் மார்போடு உன்னை அணைத்துக் கொள்ள ஓர் உறவு வேண்டுமடி உன் கணவனாக ஓர் வாய்ப்பு வேண்டுமடி
என் தனிமை முழுவதுமே பெண்ணே நீ தான் இருந்தாயே
என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கம் வகித்தவளே
எனக்குள்ளே என்னை தானே தேடி பார்க்க செய்தவளே
என் விழியோரம் கண்ணீர் துளியாக என்னுள் இருப்பவளே
எனக்கு ஒன்று ஆகும் போது முதல் ஆளாக நிற்க்கிறாயே
நீ வரும் நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் அன்பே வருவாயா என் மனைவியாக ....???
விழி மூடாமல் காத்திருக்கிறேன் அன்பே என் காதலுடன் உன் வருகைக்காக......