ஒவீ:23

901 80 111
                                    

ரவியின் தோலில் சாய்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்த வீனா திடீரென உறக்கத்திலே ஒவீ என கத்தினாள்...உறங்கத்தில் இருந்த ரவி இவள் கத்தியதில் எழுந்தவன் அவளை பார்க்க...மீண்டும் மீண்டும் ஒவீ என கத்திக்கொண்டே இருந்தாள்...இவள் கத்தியதில் தான்யாவை தவிற மற்ற மூவரும் பதறியடித்து அவளின் அறைக்கு ஓடி வந்தனர்....

மயக்கத்தில் இருந்த தான்யாவிற்க்கு வீனாவின் அலரலை உணர முடிந்தது...தன் தோழி ஏன் பயந்து அலருகிறிள்..ஒரு வேளை அந்த உருவம் அவளிடம் வந்துவிட்டதோ என அந்த மயக்கத்திலும் தன் தோழிக்காக பதறினாள்...எப்படியோ கடினப்பட்டு தன் கண்களை பிரித்தவளுக்கு அனைத்தும் மங்களாக இருந்தது...செவுரை பிடித்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக மாடி ஏறி வீனாவின் அறையை அடைந்தாள்...

அங்கு வீனாவோ ரவியின் காலரை இருக்கி பிடித்தபடி ஒவீ ஒவீ என கத்திக்கொண்டே இருந்தாள்...வீரும் ரனீஷீம் அவளை பிடிக்க முயல...உறக்கத்திலே அவர்களை தள்ளி விட்டாள்..ரவி அவளின் தலை முடியை கோதி...

ரவி: ஒன்னும் இல்லை வீனா...பயப்படாத தூங்கு...தூங்கு...ஒன்னும் இல்லை...நாங்க இங்க தான் இருக்கோம்..ஒவீன்னு இங்க யாரும் இல்லை...என கூற மெதுமெதுவாக கத்துவதை நிறித்திவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்...
வீனாவிற்கு எதுவுமில்லை என்று அறிந்தவுடன் தான் மயக்கமடைவதற்க்கு முன்பு கேட்ட வாக்கியத்தை நினைவுக்கூர்ந்து...வீர் தன் ஆர்வி தானா என தெரிந்துக்கொள்ள வேண்டி மெதுவாக

தான்யா: ஆர்வி...என அழைக்க அவளின் குரல் கேட்டு திரும்பியவர்கள்...தான்யா நிற்க முடியாமல் விழப்போனவளை அருகில் நின்ற ரனீஷ் சரியாக பிடித்து விட்டான்..

வீர்: தனு நீ ஏன் இங்க வந்த???எப்போ டி எலுந்த??
என அவள் அருகில் வேகமாக சென்றான்...எதிரிலிருந்த தண்ணீரை அருந்த வைத்தனர்...தற்போது அவள் உடம்பில் சற்று தெம்பிருந்தது...

ரக்ஷா: வா டி..ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு...

தான்யா: ஒரு நிமிஷம் டி..... வீர்

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant