💏16💏

5.7K 157 22
                                    

ஆதி காரை பார்க் செய்து கொண்டிருக்க நான் காலிங் பெல்லை அழுத்தினேன்.

"ஹாய் தியா..." என்ற குரலுடன் கதவைத் திறந்தவனை பார்த்து அதிர்ந்தேன்.

யார் இவன்?  நான் இதற்கு முன் இவனை பார்த்ததே இல்லை. ஆனால் உரிமையோடு என்னை பெயரை சொல்லி அழைக்கிறான்.

கண்ணில் கேள்வியோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க அவனோ புன்னகையுடன் "நான் யாருன்னு யோசிக்கிறீயா?"

நான் நினைத்ததை சொன்னதும் பேந்த பேந்த முழித்தேன்.

"உன்னை யாருடா உள்ள விட்டது." என்ற ஆதியும் குரலில் திரும்பிப் பார்த்தேன்.

" ஏன் நான் உள்ள வர்றதுக்கு என்ன?"

"இல்ல நீங்கதான் ரொம்ப பிஸியான ஆளாச்சே. பிரண்டோட கல்யாணத்துக்கு கூட வர உங்களுக்கு டைம் இருந்திருக்காது." என வந்தவரின் காலைவாரினான்.

"நான் தான் சொன்னேன்ல ஆன்சைட்ல மாட்டிக்கிட்டேன்னு.  நான் என்ன கனவா கண்டேன் நீ திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணுவேன்னு."

"ஏன் நான் கல்யாணம் பண்ண கூடாதா?" ஒற்றை புருவம் உயர்த்தி ஆதித்யா கேட்க நான் அவனை ரசித்துக்கொண்டிருந்தேன்.

"பரவாயில்ல நல்ல முன்னேற்றம்தான். நான் கூட நீ சிங்கிளாவே செத்துருவியோன்னு நெனச்சேன்."

இதைக் கேட்டதும் நான் வந்தவனை முறைக்க,அவன் என்னை பார்த்து விட்டு,

" சிஸ்டர் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.டோன்ட் நீ ஆங்கிரி. அவன் என்னை இன்ரிடியூஸ் பண்ணமாட்டான். நானே பண்ணிக்கிறேன். என் பெயர் சஞ்சய்.  ஆதித்யாவோட பிரிண்ட்."

இவன்தான் சஞ்சயா. இவனிடம் தான் என்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தான் என்று எண்ணம் என்னை தாக்க ஒரு நிமிடம் தடுமாறினேன்.

ஆனால் அந்த தடுமாற்றத்தை அவர்களிடம் காட்டாமல் சமாளித்தேன்.

"ஹாய்..." என சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தேன்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றதுWhere stories live. Discover now