கண்கள் மூடி தினம்
உனை நினைக்கும் நொடிகள்
நானோ என்னை மறந்து போவதன்
மாயம்தான் என்னவோ??உன் ஓரப்பார்வையால்
பட்டாம் பூச்சிகளை பார்த்து
ரசிக்காத நானோ - என்னுள்
பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப்
பறப்பதை உணர்வதன்
மாயம்தான் என்னவோ??உனை பார்க்கும் போது
என் இதயயத்துடிப்புடன் சேர்ந்து
துடிக்கும் பல துடிப்புக்கள்
நிறுத்தி வைக்கப்பட்டது போல்
உணர்வதன்
மாயம்தான் என்னவோ??என்னுயிருடன் உயிர் சேர
நீ அழைத்த பொழுது
நீ என்னையும் அறியாமல்
என் இதயத்தை
கொள்ளை கொண்டதன்
மாயம்தான் என்னவோ??விழிமூடி நான் தூங்க
என் கனவில் நீ வந்து
என்னை ஆக்கிரமித்து
உன் மாய உலகத்திற்கு
அழைத்துச் செல்வதன்
மாயம்தான் என்னவோ??இத்தனை மாயத்துக்குள்ளும்
நீ என் கண் முன் தோன்றிய நொடி
நானோ பயந்து போனேன்
நீயும் என் மாயத்துக்குள் மாயமாய்
மறைந்து போவாயோ என..
மறைந்து போவாயோ என..
YOU ARE READING
இதயத்தின் உணர்வலைகள்...
PoetryPlease forgive me if any reader find out any mistake in my book, because this is my first book..