உறவுகள் மறுத்த போதிலும்
உனக்கு
அடைக்கலம் கொடுத்தவள் நான்
உண்மைகள் கசந்த போதிலும்
உனை நம்பி
உன்னை கைப்பிடித்தவள் நான்ஆனால்
உறவுகள் இல்லாத உனக்கு
உறவென்று ஒன்று
உன்னை தேடி வர
நீ என்னை
அநாதையாக்கியதுதான் ஏனோ?
பொய்மையை நம்பி
நீ என்னை
அக்கினிப் பரீட்சைக்கு
உட்படுத்தியதுதான் ஏனோ?உன் மீது
நான் கொண்ட நம்பிக்கைக்கு
நீ கொடுக்கும் பரிசுதான் (இதுவோ)எத்தனை புனிதமானது..
உனக்காக
உறவுகளை தூக்கி எரிந்ததற்கு
நீ கொடுக்கும் பரிசுதான் (இதுவோ)எத்தனை இனிமையானது..அன்று நான் ஏங்கி கிடந்தேன்
நீ என் வாழ்வில்
கானல் நீராய் மாறிப் போய் விடுவாயோ என்று..
இன்று நான் தவம் கிடக்கிறேன்
என் இதயத்தில் நீ
கானல் நீராய் மாறிப் போக வேண்டும் என்று..
YOU ARE READING
இதயத்தின் உணர்வலைகள்...
PoetryPlease forgive me if any reader find out any mistake in my book, because this is my first book..