ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
பொத்தி வெச்சேன் எ உசுரா
பொத்தி வெச்ச நீயும்
எங்க தொலஞ்சி புட்ட எ ராசாகண்ணுக்குள்ள நீயும்
வந்து நின்னுபுட்டு
காதுக்குள்ள ரகசியமும்
சொல்லிப்புட்டு
ஒ(ன்) உசுரு என்ன நீயும்
தத்தளிக்க வெச்சி புட்டு
போயிட்டியே ஏ ராசா..காதலுனு நீ சொல்லி
எ(ன்) பின்னாடி நீ சுத்த
அண்ணனுனு நா சொல்லி
உன்ன கடுப்பேத்தி நா ரசிக்க
எ (ன்) ராசாவா மனசுக்குள்ள
நீயும்தான் நுழஞ்சிபுட்ட..சுத்தி சுத்தி நீ வந்து
எ(ன்) அண்ணக்கிட்ட மாட்டிக்கிட்டு
முழிக்குற முழியுள நானும் தான்
கவுந்து புட்டேன்..
இளிக்கிற இளியிலே
ஒன்ன லூசா நெனச்சிபுட்டு
மெரட்டி மட்டும் அனுப்பிபுட்டான்.." ஏய் மீனு.. ஒன்ன லவ்வ கிவ்வ பன்னி தொலச்சிப்புட்டேன்"னு
நீ சொல்லி போன நோடி
நானும்தா சாஞ்சிபுட்டேன்..
'ஏய் மாமோய் எ(ன்) உசுரு நீதானு
கண்ணாலே சேதி சொல்லி
ஒன்ன தாண்டி நானும்தா
ஆனந்தமாய் சென்றுபுட்டேன்..வாயுவிரிய நீயும்தா
பல்லுசெட்டு வெளிய தெரிய
குத்தாட்டம் ஆடுறியே..
மல்லுக்கட்டி நீயும்தா
கொஞ்சி நின்னு என்னத்தா
காதலுதான் பண்ணுறியே..
உசுரா நீ வந்து
ஏ(ன்) மனசுக்குள்ள குடியேற
வில்லனுனு ஏ அண்ண(ன்)
நானும்தான் மறந்துப்புட்டேன்..கல்யாண கோலத்தில
என்ன வர சொல்லிபுட்டு
நீயும்தா சென்டுப்புடடாய்
சாமி அவ(ன்) சந்ததிக்கி
நானும்தா வந்துப்புட்டேன்..
மகராசா நீயும்தா
ராஜ நட போட்டு வர
கண்ணு ரெண்டும் ஒன்னக் காண
நானுந்தா சரிஞ்சுபுட்டேன்..
வில்லனவ(ன்) ஏ அண்ண
கத்தி வெச்சி என்ன மெரட்ட
ஒன்ன நீயே மாச்சிக்கிட்டாய்
ஏ ராசா
ஒ உசுரு நா இங்க தினம் செத்து செத்து பொலக்கிறேனே..ஒ நெனப்பு நெஞ்சுக்குள்ள வாடாது கிடக்குதய்யா..
ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
பொத்தி வெச்சேன் எ உசுரா..
பொத்தி வெச்ச நீயும் என்ன
ஏங்க வெச்சிப்புட்டு
போயிட்டியே ஏ ராசா..
YOU ARE READING
இதயத்தின் உணர்வலைகள்...
PoetryPlease forgive me if any reader find out any mistake in my book, because this is my first book..