உன்னை கண்ட அந்த நொடி
என்னுள் நான் மயங்கி
விழிகளை அசைக்க முடியாமல்
காலக் கண்ணனின் ஓட்டத்தை
எனக்காக ஒரு முறை
நிறுத்த மாட்டானோ என்று
ஏங்கி கிடந்தேனடா..உன் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளில்
என்னுள் நான் தயங்கி
என் பெயரை
நீ உச்சரிக்கும் நொடிக்காக
காத்திருந்த நிமிடங்களில்
உன் பார்வை - எனக்கு
ஓராயிரம் அர்த்தங்களை சொல்லி
என்னைக்
கிறங்க வைத்ததடா..ஒளிந்து நின்று
நான் உன்னை பார்க்க
உன் கள்ளப் பார்வையில்
நான் மாட்டி
வெட்கத்தில் தத்தளித்த நொடிகளை
என் இதயச் சிறையினுள்
சிறை செய்து உனக்காய்
சேமித்து வைக்கிறேனடா..இருவாய் சாப்பாடு
நீ உண்ணும் அழகை
நான் காணாமல் கலங்கிப் போக
உன் பேச்சுக் குரல்
இனிமையின் சிகரமாய்
என் காதை வந்து எட்டி
எனக்கு
நான் பெற்ற வரத்தின்
மகிமையை உணர்த்தியதடா..என் கனவுலக தேவனாய்
நீ என்னை ஆக்கிரமித்த
உதயம்
என் நிஜ உலக நாயகனாய்
என் கண் முன் நின்று
தவத்திற்கு ஒரு உயிரைக் கொடுத்து
நிலாப் பொழுதிற்கு அழகூட்டினாய் என்னுள்..
YOU ARE READING
இதயத்தின் உணர்வலைகள்...
PoetryPlease forgive me if any reader find out any mistake in my book, because this is my first book..