சக்தி வந்ததைக் கூட அறியாமல்
ஆதிரா முழங்காலைக் கட்டிக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்.அவளுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தவன் ம்ஹீம் என செறுமினான்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்.
சக்தி எப்போ வந்த .....
இப்பதான்...
ஒரு நிமிஷம் இரு காபி எடுத்துட்டு வரேன் என எழ முற்பட்டவளை கையை உயர்த்தி அமரச் சொன்னவன்.
அப்படி என்ன திங்க்கிங் நான் வந்ததுக் கூடத் தெரியாம என்றான் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.
ஹாங்....அதுவா ஏதோ ஒரு நினப்புல இருந்துட்டேன்.அதான் கவனிக்கல. நான் போயி காபி எடுத்துட்டு வரேன்.
எனக்கு காபிலாம் எதுவும் வேண்டா ஆதிரா. நாம இப்போ வெளிய போறோம் என்றான் அவளையே பார்த்தபடி.
வெளியவா ....என்றவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு.
நான் வெளிய எங்கயும் வரல சக்தி. நீ மட்டும் வேணும்னா போயிட்டுவா என்றவளிடம்.
இல்ல ஆதிரா நீ வந்து தான் ஆகனும். அது முக்கியமான இடம்.சப்போஸ் உனக்கு அந்த இடம் பிடிக்கலனா இனிமேல் உன்ன கம்பல் பன்ன மாட்டேன்.பட் இப்ப நீ எங்கூட அங்க வந்தாகனும்.
ஆதிரா பல முறை மறுத்தும் அவளை வற்புறுத்திய சக்தி அவளுக்கு புதிதாகவே தெரிந்தான்.
எப்பொழுதும் தன் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யாதவனின் இன்றைய பிடிவாதம் ஆதிராவை குழம்பச் செய்தது.
வேண்டா வெறுப்பாக ஆதிரா வருவதாக ஓப்புக் கொண்டாள்.
பைக்கிலிருந்து இறங்கியவள் பலகையில் உள்ள அன்னை இல்லம் என்பதை வாசித்துவிட்டு சக்தியின் புறம் திரும்பி
இங்க.,,என இழுக்க.,,
உள்ள வா சொல்றேன் என உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் அன்னை இல்லத்தின் நுழைவாயில், அதற்கு இடப்பக்கம் ஒரு சிறிய பூங்கா அங்கு வசிப்பவர்களுக்கென.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்