பிளாஷ் பேக்
தேனிநிலவு முடித்துவந்த இருவருமே வந்த மறுநாளே அலுவலகம் சென்றிருந்தனர்.
புதுமணத் தம்பதியினருக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்க அதை மறுக்காமல் பெற்றுக் கொண்டனர்.
வருண் வந்தவுடன் தேடியது சக்தியை தான்.
சக்தி முயன்று இயல்பாக இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடனே கணித்துவிட்டான் ஏதோ பிரச்சனை என்று...
மதியம் உணவு வேலையில் சக்தியை வற்புறுத்தி உண்ண அழைத்து வந்தவன்,
உன்முகமே சரியில்ல.சொல்லு என்ன பிரச்சனை உனக்கு.
பிரச்சனையா எதுவும் இல்லையே.நான் நல்லாதான் இருக்கேன்.
நீ பொய் சொல்ற. உண்மைய சொல்லு என்ன நடந்துச்சு.
அதான் ஒன்னுலனு சொல்றேன்ல அப்றம் என்னடா.,
வருணிற்கு கோபமாக வந்தது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்.
சரி லவ்வ அண்ணிக்கிட்ட சொல்லிட்டியா .
இன்னும் சொல்லல.
என்ன சொல்லலையா.இன்னும் சொல்லாம என்னடா பன்னிட்டிருக்க.ஏன்டா சொல்லல.
ப்ச்...நான் எப்பவேனாலும் சொல்லுவேன்.சும்மா நொய்யி நொய்யினு.,
என்னடா நான் உன் நல்லதுக்கு தான சொல்றேன்.
என்ன நல்லதுக்கு.என்னோட நல்லது கெட்டத யாரும் பார்க்க வேண்டா. நீ முதல்ல என் பர்சனல்ல தலையிடறத நிப்பாட்டிக்கோ என்றவன் விருவிருவென அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
வருணிற்கு தெரியும் சக்தி இப்படி பேசக் கூடியவனில்லை என்று.அதன்பின் சக்தி அவனிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை...எப்பொழுதும் தன்னிடம் சொல்லிவிட்டு கிளம்புவன் இன்று சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பினான்.எல்லாம் தவறாகப் பட மதியை வீட்டில் விட்டுவிட்டு சக்தியின் வீட்டிற்குச் சென்றான். வீடு பூட்டிக்கிடக்கவே.,.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்