கண்டிப்பாக சக்தி அழைத்தால் ஆதிரா அவனுடன் வரமாட்டாள் என்று தெரியும். வர மறுப்பவளை பைக்கில் அழைத்துச் செல்வது கஷ்டம் என்பதால் தான் வருணிடம் காரை வாங்கி வந்தான்.
வெகுநேரமாக சிரமப்பட்டு அழகையை அடக்கியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.ஜன்னலின் புறம் திரும்பியவள் மௌனமாக அழுதாள் சக்தியிடம் அப்படி பேசியதற்கு.இதை அனைத்தையும் கவனித்தபடி தான் சக்தி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு ரெஸ்டாரன்டின் முன் காரை நிறுத்தி இறங்கியவன் பின் சீட்டின் டோரைத் திறந்துவிட்டு,..
இறங்கு கீழ..என கட்டளையிட
எங்கு வந்திருக்கிறோம் எனச் சுற்றும் முற்றும் பார்த்தவள்.,என்னால வர முடியாது ...என்றிட...
அப்ப சரி உன்ன இழுத்துட்டு போகறத தவிர வேற வழித் தெரியல எனக்கு ...என்றவன் அவளது கையை நோக்கி தனது கையைக் கொண்டுச் செல்ல அவனது கையை தட்டி விட்டு..
வேண்டா நானே வரேன் என்றவள் வேண்டா வெறுப்பாக அவனுடன் நடந்தாள்.
உள்ளே கார்னரில் ஒரு டேபுள் காலியாக இருக்க அங்கு இருவரும் அமர்ந்தனர்.
அவள் வேண்டாம் என மறுத்தும் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்து அதைக் குடிக்கத் தொடங்கினான்.
திடீரென எதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறான் என புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவள் அவளை நோக்கி மதன் வருவதைக் கண்டு எழுந்து நின்றுக் கொண்டாள்.
அவள் எழவும் தானும் எழுந்துக் கொண்டவன் ....
என்னாச்சு .,,
சக்தி வா நாம கிளம்பலாம்.,சீக்கிரம்.,.
ஏன்,..
சொன்னாக் கேளு கிளம்பு..என ஆதிரா துரிதப்படுத்த..,
நாம மீட் பன்ன போரவங்க இன்னும் வரல.,அவங்க வரட்டும் பாத்துட்டுப் போயிடலாம்...
சக்தியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டவளின் கண்கள் கலங்கியது...
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்