பெண்கள் எல்லோரும் நைஸாக வீடு வந்து சேர்ந்தனர்.ஹாலிலேயே தங்கையோடு வந்த தோழிகளை பிடித்தான் கிருஷ்ணா.
"என்ன எல்லாரும் எங்க போயிட்டு வர்றீங்க?" என்றான் கம்பீரமான அவன் குரலில்.
தங்கை சற்று தயங்கி விட்டு மற்றவர் களை பார்த்தாள்,கீர்த்தி உடனே "இங்க தான் கார்டனில் ஹய்டு அன் சீக் விளையாடிட்டு இருந்தோம்."
"யாரு நீங்க எல்லோரும், அத நா நம்பணும்..? செல்லி எங்க போனீங்க?"என்றான் தங்கையிடம் கண்டிக்கும் தொனியில்.
மிரண்ட நிருவை அருகில் வந்து ராதாவும் டீனாவும் இரு தோள்களிலும் கைகளை அழுத்திவிட்டு "கிருஷ், கமான்யா வீயார் ஹங்கிரி. உன் என்கொயரியை அப்புறம் வச்சுக்கோ.கம் நிரு சாப்பிட போகலாம்" என்று அவளை தள்ளி கொண்டு சாப்பிட சென்றார்கள் மற்ற பெண்கள் எல்லாரும்.
சற்று நேரம் பொறுத்து கிருஷ்ணா, பெண்கள் இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினான். உள்ளே இருந்து உரக்க சிரிப்பு சத்தம் கேட்டது. கதவு திறந்தது, அது ராதா.
என்ன?? என்று கேள்வியாய் பார்த்தாள்.
"செல்லி??" என்றான் உள்ளே எட்டி பார்த்தபடி.
"ம்ச்.." என்று அவனை வெளியே தள்ளியபடி தானும் வெளியே வந்து கதவை சாத்தினாள்.
"உனக்கு இப்ப என்ன பிரச்சனை? எதுக்கு இவ்வளவு என்கொயரி?" என்றாள் சுள்ளென்று.
"எல்லோரும் எங்க போனீங்க?" என்றான் நேரடியாக.
"கௌதமை பார்க்க" என்றாள் அவள் இலகுவாக.
"ம்ச்..செல்லியுமா?" என்றான் அதிர்ச்சியுடன்.
"ம்..ஏன்?" என்றாள் மறுபடியும் சாதாரணமாக.
"ம்ச்...நீங்க எல்லோரும் லூசா..எங்க வீட்டில தெரிஞ்ச பிரச்சனை ஆகிடும்" என்றான் அவன் நிலை கொள்ளாமல்.
"ம்ச்..கமான் கிச்சா..டோண்ட் சே இட் அவுட், இப்ப தான் உன் சிஸ்டருக்கு இந்த கல்யாணத்தில் கான்பிடன்ஸே வந்திருக்கு, டோண்ட் ஸ்பாயில் இட்" என்றாள் தெளிவாக.
BẠN ĐANG ĐỌC
இதுவும் காதலா?!!!
ChickLitதிகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல...