அத்தியாயம் 19

4.1K 199 24
                                    

காலை உணவு வேளை தாண்டி ஒரு மணி நேரம் கழித்து வந்த கிருஷ்ணா நேராக டயனிங்கிற்கு போனான்.வேணி வேகமாகவும் ஆசையாகவும் மகனுக்கு வேண்டியதை வைக்க சொன்னாள்.எதுவும் பேசாமல் எதையும் காணாமல் சாப்பிட்டவன் கையை கழுவிவிட்டு ஹாலிற்கு வந்தான் திரு ஏதோ பைலை எடுத்து கொண்டு வெளியே கிளம்பியவன் ஒரு நிமிடம் நின்று கிருஷ்ணாவை பார்த்தான்.

"மாமா லண்டன் பிசனஸ் சம்மந்தமா நான் சீக்கிரமே லண்டன் கிளம்ப வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன், அதுக்கு எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறீங்களா?" என்றான் கிருஷ்ணா.

ஆச்சரியம் தாங்காமல் அருகில் வந்தவன் "கிருஷ்ணா..நீ..கொஞ்ச நாள் போகட்டுமே..உடனே உன்னால போய் கான்சன்ரேட்..." என்று இழுத்தான்.

"இல்ல மாமா..இஃப் மை மெமரி ஈஸ் ரைட் இன்னும் சிக்ஸ் மன்த்ஸ்ல நான் என் அக்கவுண்டிங் அங்க சப்மிட் பண்ணியாகணும் இல்லாட்டி லைசன்ஸ் கேன்சல் ஆகிடும் ஸோ நான் இன்னும் ஒரு 15 டேஸ்ல கிளம்பலாம்னு யோசிச்சு இருக்கேன்" என்றான் தீர்மானமாக.

சற்று நிம்மதி பெருமூச்சுடன், மருமகனை தட்டி கொடுத்துவிட்டு " ஆஸ் யூ விஸ்..என்ன செய்யணும்னு சொல்லு நான் இருக்கேன் உன் கூட" என்றான் திரு.

"ம்..தேங்க்ஸ் மாமா..ஆராக்கு பாஸ்போர்ட், வீசா ரெடி பண்ணனும்" என்றான் கிருஷ்ணா.

"பாப்பாவுக்கா..நீ மட்டும் அவளை ..இட்ஸ் நாட் குட் ஐடியா கிருஷ்ணா..நீ போ பிசினஸை எஸ்டேபிளிஸ் பண்ணு அப்புறம் பாப்பா கொஞ்சம் வளர்ந்தப்புறம் பார்த்துக்கலாம்" என்றான் திரு வேகமாக.

கண்ணை தீர்க்கமாக மூடி திறந்தவன் "நான் உங்க கிட்ட ஓப்பீனியன் கேட்கலை மாமா..ஐ ஹேவ் டிசைடட்" என்றான் கிருஷ்ணா அழுத்தமாக.

சற்று அதிர்ந்தபடி அக்காவை பார்த்தவன் "சாயங்காலம் பாவா வரட்டும் கிருஷ்ணா பேசலாம்" என்றான் அமைதியாக.

"ம்..சரி" என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவன் அறைக்கு சென்றான்.

இதுவும் காதலா?!!!Opowieści tętniące życiem. Odkryj je teraz