அத்தியாயம் : 05

609 32 3
                                    

நீண்ட நாட்களின் பின் அவனைக் கண்ட மகிழ்ச்சியில் உறக்கம் என்னை விட்டு தொலைதூரமாகச் சென்றிருக்க...அறையோடு இணைந்திருந்த பல்கனியில் போய் நின்று கொண்டேன்... 

இருள் அதிகமாய் சேர்ந்திருந்த அந்த நேரத்தில் குளிர் தென்றல் என்னை வருட,கண்ணை மூடி அந்த இதத்தை ரசித்துக் கொண்டேன்...இங்கிருந்து கொஞ்சம் தூரமாய் தெரிந்த வெளிப்புறப் பாதையில் வந்து வந்து போய் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்,என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும் திரும்பிப் பார்த்தேன்... 

வேறு யார் என்னைப் பார்க்கப் போகிறார்கள்...அவன்தான் என்னை கைகளிரண்டையும் ஜீன்ஸ் பாக்கெட்டிற்குள் விட்டவாறு பார்த்துக் கொண்டிருந்தான்... 

அவன் இந்த அறையினை எனக்கென்று தனியாக ஒதுக்கித் தரும் போதே நினைத்தேன்,இவன் இப்படித்தான் வந்து நிற்பானென்று...ஆனால் எனக்கும் அதிலொன்றும் வருத்தம் இருக்கவில்லை....சொல்லப் போனால் அவனை விடவும் சந்தோசம் எனக்குத்தான்...

என் சந்தோசத்தினைக் கண்டு கொண்டவனாக என்னைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவன்,நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வேளையில் அவனது பல்கனியிலிருந்து பாய்ந்து எனது பல்கனிக்கு வந்திருந்தான்... 

இரண்டு பல்கனிகளுக்குமிடையே இடைவெளி இல்லாமல் இருந்த போதே நான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்...ஆனால் நான்தான் அவனைக் கள்ளமாய் ரசிப்பதிலேயே பிசியாக இருந்து விட்டேனே...இப்படி முன்னே வந்து அதிர்ச்சி வைத்தியம் தருவானென்று எங்கே எதிர்பார்த்தேன்...?? 

முதலே இதை யோசித்திருந்தால் அறைக்குள்ளாவது ஓடித் தப்பித்திருக்கலாம்...இப்போதோ அவன் என்னை எங்கேயும் நகர விடாது இரு கைகளையும் என் இரு பக்கங்களிலும் ஊன்றி சிறைப் பிடித்திருந்தான்...அந்தச்சிறை எனக்குப் பிடித்தமானதென்பதால் நானும் மனதளவில் அதில் விருப்பத்துடனேயே சிறைப்பட்டுக் கொண்டேன்... 

நேருக்கு நேராய் எங்கள் விழிகள் நான்கும் மோதிக் கொண்டதில்,அங்கே சற்று நேரத்திற்கு மௌனமே நீடித்தது..என் விழிகளுக்குள் ஊடுருவல் செய்தவன், 

நெஞ்சோடு கலந்திடுWhere stories live. Discover now