அத்தியாயம் : 07

1.2K 41 45
                                    

அன்று அவன் தந்த முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தில் இன்றும் என் மேனி சிலிர்த்துக் கொண்டது...அந்த அணைப்பின் பின்பு அவன் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை...என் அழுகை தீரும் வரை அவனது அணைப்பிலேயே என்னை வைத்திருந்தவன்...அதே அணைப்போடே என்னை வீடு வரை வந்து விட்டுச் சென்றான்... 

அன்றைய நாள் என் வாழ்க்கையிலேயே அதிக சந்தோசங்களைக் கொட்டிக் கொடுத்த நாள் என்றுதான் சொல்ல வேண்டும்...அது போன்றதொரு நாள் இனியும் என் வாழ்க்கையில் வருமா என்று தெரியவில்லை...அப்படி ஒரு நாள் வந்தாலுமே அந்நாளைப் போல் எந்நாளும் அமைந்துவிடாதென்பது நிச்சயமே... 

மறுநாள் அவனிடம் என் மனதைத் திறந்து அனைத்தையும் சொல்லி விடப் போகும் நினைவில் அன்று என்னை இந்த உலகமே சேர்ந்து தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது...அன்றைய இரவில் அவ்வளவு பூரிப்பு எனக்குள்... 

நேரம் போனதே தெரியாமல் அவனது நினைவுகளிலேயே மூழ்கிக் கொண்டிருந்தேன்...மறுநாள் விடிந்ததுதான் தாமதம் ஒரு விநாடியைக் கூட நான் வீண் செய்யவில்லை...உடனேயே தயாராகி அவனுக்காக நான் பார்த்துப் பார்த்து தயார் செய்திருந்த பரிசுகளோடும்...என் காதலோடும் கடற்கரையை நோக்கி ஓடினேன்... 

மூச்சிரைக்க கடற்கரையை வந்தடைந்த நான்...கடிகாரத்தைச் சுழல விட்டவாறே அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்...ஆனால் நிமிடங்கள் பல கடந்தும் அவன் மட்டும் அன்று வரவேயில்லை...நான் அவனிற்காய் காத்திருப்பேன் என்று தெரிந்தும்,"அவன் ஏன் வரவில்லை...??.."என்ற கேள்வியே எனக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது... 

மறுபடியும் என்னோடு ஏதும் விளையாடிப் பார்க்கிறானா என்ற எண்ணம் வந்த வேகத்திலேயே மறைந்தது...கடிகாரத்தைப் பார்ப்பதும் பாதையைப் பார்ப்பதுமாகவே என் விழிகள் அவனது வருகைக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க...அவனிற்குப் பதில் அலைபேசி அழைப்புத்தான் என்னைத் தேடி வந்தது... 

ஆனால் அதுவுமே அவனிடத்திலிருந்து வரவில்லை...தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தது மட்டும்தான் என் ஞாபகத்தில் உள்ளது....அதன் பின் எப்படி அந்த வைத்தியசாலையை வந்தடைந்தேன் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்... 

You've reached the end of published parts.

⏰ Last updated: May 09, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நெஞ்சோடு கலந்திடுWhere stories live. Discover now