அவனிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னும் என்னால் அங்கே ஓர் விநாடி கூட நிற்க முடியவில்லை...வரத்துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொண்ட நான்,அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே ஒரே ஓட்டமாக வந்துவிட்டேன்...அவனும் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை...
எப்படி வீட்டை வந்தடைந்தேன் என்று தெரியவில்லை...வீட்டு வாசலைக் கண்டதுமே அதுவரை நேரமும் உள்ளே அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் வெடித்துக் கிளம்பியது...என்னால் இப்போதும் அவனது வாய் உதிர்த்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை...அதே நேரத்தில் அதை என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...காரணம் அவன் அதை என்னிடத்தில் சொல்லும் போதே அவனது விழிகளில் பொய்மை இருக்கவில்லை...
அவனது அந்த வார்த்தைகளையே நினைத்து நினைத்து அழுது ஒய்ந்த நான்,அப்பா வெளியே வருவது போன்று அரவம் தெரியவும் வேகமாக என் கண்களிரண்டையும் துடைத்துக் கொண்டேன்...அதற்குள் என்னை நெருங்கிவிட்டவர்,
"என்னம்மா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு...அழுதியா நித்தியா...??.."
இல்லை என்று என்னால் எப்படி அவரிடம் பொய்யுரைக்க முடியும்...அதுவும் அப்போது நான் இருந்த மனநிலையில்...மீண்டும் என் கண்கள் இரண்டும் குளமாக அவரது மார்பில் சாய்ந்து கொண்டேன்...
என்னை ஆதரவாக அணைத்துக் கொண்ட அவரது கரம் என்னைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போனது...ஏற்கனவே உடைந்து போயிருந்த உள்ளம்...என் தந்தையின் அணைப்பில் இன்னும் நொறுங்கிப் போனது...
"என்னடா ஆச்சு...இன்னைக்கு கடைசி நாள் என்டதால எல்லாரையும் பிரியுறது மனசுக்கு கஸ்டமாத்தான் இருக்கும்...அதுக்காக இப்படியா சின்னக் குழந்தை மாதிரி அழுகுறது...??..."என்று அவரால் ஊகிக்கப்பட்ட காரணத்திற்கு என்னைச் சமாளித்து தேற்றிக் கொண்டிருந்தார்...ஆனால் அவருக்குத் தெரியவில்லை...என் வாழ்க்கையே என்னைவிட்டு விலகிவிடப் போகிறதென்று...
YOU ARE READING
நெஞ்சோடு கலந்திடு
Romanceஇரு உள்ளங்களின் அழகிய காதல் போராட்டம்... விலகி விலகிப் போகும் நாயகி, விலகாமலேயே தொடரும் நாயகன், இறுதியில் இரு மனங்களின் காதலும் ஒரு மனதானதா??என்பதே கதை..