பெற்றெடுத்து அமுதுடன் சோ்த்து பண்பையும் கற்றுதரும் அன்னையாக...!!!
தந்தையிடம் இருமுகம்....
செல்ல மகளாக இளமை முகம்...
கண்ணடிப்பான அன்னையாய் முதுமை முகம்.....!!!சகோதரனிடம் செல்ல சண்டை செய்வதில் சண்டைக்காரியாக....!!!
தோழனுக்கு கண்ணியமான
உற்ற தோழியாக....!!!கணவனுக்கு கணக்கில்லாமல் அன்பை தரும் காதல் மனைவியாக....!!!
கர்ப்பினை காத்து கொள்வதில் வீர மங்கையாக...!!!
தலைமை பண்பு பெற்ற பின்பும் தலைக்கணம் இல்லாத பெண்ணாக...!!!
நவீன உலகத்திலும்
நாகரீக செல்வியாக...!!!உறவுகள் அனைத்தையும் வழி நடத்தி செல்லும் முதுபெரும் பெண்ணாக..!!!!
சுதந்திர பெண்ணவளை சிறையெடுக்க மனம் கொண்டால்....
அன்பெனும் சிறையென்றால் தப்பினாய்...
இல்லையெல் சிறைக்குள் உன்னை அடைத்திடுவாள் ....!!!அத்தனை உருப்பெற்று சளைக்காமல் ஒவ்வொரு விடியலிலும் தன்நம்பிக்கையுடன் புதிதாக பிறப்பெடுக்கும் அவளுக்கு அத்தனைக்கும் ஆசையில்லை...
அளவான ஆசைக்கே வழி இல்லை....!!!பல வலிகள்.... உணா்வுகள் எல்லாம் மனதில் ஆர்ப்பரித்து நிற்கிறது....
நின்று கேட்க யாரும் நினைக்கவில்லை.....
சொல்லி அவளும் அனுதாபம் பெற விரும்பவில்லை....!!!அத்தனையும் மறைத்து வாழ்ந்திடும் அவள் அன்பை மட்டும் மறைப்பதில்லை....
அன்பு அவளாளே பேரன்பானது...!!!"பேரன்பு" கொண்ட அவள் கர்வம் கொள்ளாமல் இருந்தாள் "பேரழகு" நங்கையாகிறாள்...!!!!
பெண்ணாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.... பெண்கள் தின வாழ்த்துக்கள்.....💐💐💐