மாடியில் வந்து தன்னந்தனியாக அழுது கொண்டிருந்தவளை, யாரோ படியேறி வரும் சத்தம் திகைக்கச் செய்ய, அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து திரும்பி நின்றாள் அவள்.
ஆனால் "கீர்த்தி..." என மாறனின் குரலில் அவளது பெயர் அழைக்கப்பட, நின்ற கண்ணீர் மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்கியது.
திரும்பாமலேயே, "ஜாக்கிரதையா கிளம்பிப் போ. மகதியை நல்லாப் பாத்துக்கோ. அவ எது கேட்டாலும் மாட்டேன்னு சொல்லாம வாங்கிக் குடு. அவளுக்கு சாக்லேட் கேக் ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அடிக்கடி தரவேணாம்.. பல்லு வீணாப் போயிடும். நேர நேரத்துக்கு நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும். உடம்பைப் பாத்துக்கங்க" என அவள் அடுக்கிக்கொண்டே போக, அவன் தளர்வாக நடந்து வந்து அவள் பக்கத்தில் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றான்.
அவளது சிவந்த கண்களைப் பார்த்தாலும், எதுவும் கேட்காமல் சிலகணங்கள் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.
அவளே அழுகை தீர்ந்து கொஞ்சம் சமனானதும் அவனிடம் திரும்பினாள்.
"டைமாச்சு.. கிளம்பலையா?"
"கிளம்பணும்."
"அப்பறம் என்ன--"
"ஆனா கிளம்பறதுக்கு முன்னால உனக்கு ஒண்ணு தரணும்."
தனது முதுகிற்குப் பின்னாலிருந்து எதையோ எடுத்தான் அவன்.
சின்னதாக அட்டைப்பெட்டி போன்று இருந்தது; செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.
"எ..என்னதிது?"
"அட, பிரிச்சுப் பாரேன்.."
அவனை சந்தேகமாகப் பார்த்தவாறே அதைப் பிரித்தாள் அவள். காக்கி நிற அட்டைப்பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்ததைக் கையில் எடுத்தபோது, மெலிதாகத் திகைத்துப்போனாள் அவள்.
"காபி ஃபில்ட்டர்!?"
புத்தம்புதிய பித்தளை ஃபில்ட்டர் அது. மாறனின் வீட்டில் உள்ளதைப் போலவே. அவனது காபியின் சுவையான ரகசியம்.
YOU ARE READING
முன்பனியா முதல் மழையா🌧🌨💙
Romancecute, sweet, and a little cliché... the perfect combination!