9

321 21 4
                                    

வார இறுதியில் சனிக்கிழமையில் ஏதோ விடுமுறை வர, வெள்ளிக்கிழமை மாலையே காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் கீர்த்தி. ஞாயிறன்று அம்மா சொன்ன திருமண விழாவிற்குச் சென்றுவந்ததால் திங்கட்கிழமை காலையில் தான் சென்னைக்குத் திரும்ப பஸ் ஏறினாள்.

அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லியிருந்ததால் வீட்டில் தளர்வாக ஒரு கோப்பை பழரசத்துடன் சோபாவில் சுருண்டு அமர்ந்துவிட்டாள் அவள், மடிக்கணினியில் ஆங்கிலத் தொடர் ஒன்றை பார்க்க.

மதியம் அவசரமின்றி ஆற அமர தனக்காக சமைத்த பாஸ்தாவை தட்டில் எடுத்துக்கொண்டு, அதன் அழகை மெச்சி கைபேசியில் ஏழெட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தவளை, வாசல் அழைப்புமணி இடைவெட்டி அழைத்தது. கதவைத் திறந்தபோது மகதி நின்றிருந்தாள், பள்ளிச் சீருடையுடன்.

"ஸ்கூல் பாதி நாள்தான் இருந்தது. தாண்டிப் போறப்ப உள்ள சத்தம் கேக்குதேன்னு வந்தேன்.. வேலைக்குப் போகலையா கீர்த்தி?"

"ம்ம்.. இல்ல, உள்ள வர்றியா?"

"ம்ம், ஏன் திடீர்னு லீவு?"

"அதுவா, ஊர்ல இருந்து காலைல வர்றதுக்கு லேட்டாகிடுச்சு, ஸோ எதுக்கு லேட்டா போயி திட்டு வாங்கறதுன்னு, உடம்பு சரியில்லனு லீவு சொல்லிட்டேன்! சம்பளத்தோட விடுமுறை! சூப்பர்ல??"

கண்ணடித்து அவள் கேட்க, மகதி சோகமாகப் பார்த்தாள்.

"ஏன் மகதி? என்னாச்சு?"

"இல்ல.. எங்கண்ணா ஓயாம உழைச்சாலும் அரைநாள் கூட அவனுக்கு லீவு தரமாட்டேங்கறாங்க.. அவனோட சம்பளமும் மாசக்கடைசிக்குள்ள கரைஞ்சு போயிடும்.. உன்னைப் பாத்துட்டு, அண்ணாவுக்கும் இதே மாதிரி நல்ல வேலை கிடைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன். அப்படி கிடைக்காம போனது என் தப்புதான்.."

அவளது குழந்தைக் குரலில் இத்தனை சோகம் தொனிக்க அவள் பேச, கீர்த்தியின் நெஞ்சம் கனத்தது.

"ஏன் மகதி.. நீ என்ன பண்ணின?"

"நான் ஒருத்தி இருக்கறதால தானே அண்ணாவால மேல படிக்க முடியல? என்னை விட்டுட்டு எங்கயுமே போக முடியல? என்னைப் பாத்துக்கணும்னு தானே அவனோட கனவையெல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டான் அவன்.."

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now