மூன்று நாட்கள் கழித்து இரவு மகதியை அழைத்துச்செல்ல அவன் வந்தபோது, காபிக் கோப்பை ஒன்றை அவன்புறம் நீட்டினாள் அவள்.
"நைட்ல காபி--" என ஏதோ சொல்ல வந்தவன், அதனுள்ளே காபி எதுவும் இல்லாமல் வெளிர்நீலத்தில் சுருளாக ஏதோ துணி இருப்பதைக் கண்டு குழப்பமாக அதை வெளியே எடுத்தான்.
"என்னதிது?"
"கழுத்துல கட்டற டை. முன்னப்பின்ன பாத்ததில்லையா?"
"அது தெரியுது.. இது என்னத்துக்கு எனக்கு?"
"ப்ச்.. இண்டர்வியூவுக்கு போகும்போது டை கட்டாம போனா, நல்லாவா இருக்கும்?"
அவன் குழப்பத்தோடு நிமிர, அடக்கிய புன்னகையுடன் தன் கைப்பையிலிருந்து ஒரு வெள்ளை உறையை எடுத்து நீட்டினாள் அவள். இன்ஃபோசிஸ் நிறுவன முத்திரையிட்ட அக்கவரைக் கண்டதும் மாறனின் முகம் வியப்பில் விரிந்தது.
அதைக் கவனித்த கீர்த்தி சிரிப்புடனே, "ஜூனியர் டெவலப்பர் வேலைக்கு இண்டர்வியூ. வர்ற வெள்ளிக்கிழமை. செலக்ட் ஆனதும் என்னோட ப்ராஜெக்டுக்கு தான் வரணும், ஓகேவா?" என்றவாறே அவனது கையில் திணித்தாள் கால்-லெட்டர் அடங்கிய கவரை.
ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து நின்றவன், மறுகணமே அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
"தேங்க்யூ கீர்த்தி.. தேங்க்யூ சோ மச்!"சில நொடிகள் தான் என்றாலும், அவனது அணைப்பிற்குள், அவனது நெஞ்சத்தில் சாய்ந்தவாறு நின்றது அவளை ஏதோ செய்ய, சிலிர்த்து விலகினாள் அவள். முகத்தில் எவ்வித மாற்றமும் காட்டாமல் புன்னகைத்தவள், "ஆல் தி பெஸ்ட்" என்றுவிட்டு நகர்ந்தாள்.
***
வாசல் கதவு தட்டப்படும் சத்தத்தில், கீர்த்தி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் மகதிக்கு.
உற்சாகமாக 'குட்மார்னிங்' சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
"சொல்லு மகதி, என்னாச்சு? எங்க உங்க அண்ணா? இன்னிக்கு இன்டர்வியூல்ல? ரெடி ஆகியாச்சா?"
YOU ARE READING
முன்பனியா முதல் மழையா🌧🌨💙
Romancecute, sweet, and a little cliché... the perfect combination!