அவளிடமிருந்து மோதிரத்தை வாங்கி வைத்துக் கொண்டான் அந்த ஆட்டோ ஓட்டுனர்.
"இந்தாமா என் நம்பர நோட் பண்ணிக்கோ நாளைக்கு ஸ்டான்ட்ல வந்து காச கொடுத்துட்டு மோதிரத்த வாங்கிக்கோ. அப்புறம் இந்த ஏரியா மோசம் கொஞ்சம் சூதானமா இரு."
"இங்க தனியா இருந்து என்ன பண்ண போறாளோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்" தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
"சரிண்ணே." என்ற படி தன் அலைப்பேசியில் அவன் எண்ணை சேமித்துக் கொண்டாள்.
மீண்டும் ஆட்டோவை தொடங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். ஆட்டோ முன் நகர நகர தீபாவை கண்ணாடியில் கவனித்துவிட்டே அங்கிருந்து மறைந்தான். யாருமில்லா காட்டில் தனித்து விடப்பட்டது போலானாள் அவள். அவள் நடுக்கத்தன்மை தற்போது சற்று அதகமாகியிருந்து. நாய்களின் ஓலம் ஆங்காங்கே உறக்க ஒலிக்கப்பட்டது. அருகிலிருந்த கல்லூரியின் முன் கதவும் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு காவலாளி மட்டும் கதவருகே நாற்காலியில் அமர்ந்து கொண்டே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அங்கும் இங்கும் நடத்த வண்ணம் இருந்தாள் அவள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு அந்த காவலாளியிடம் சென்று எதாவது உதவி கேட்கலாமென நினைந்து அருகில் சென்றாள் அவன் குடித்த மதுவின் வாசம் அவள் குடலைப் பிடுங்கியது உடனே பின்னால் வந்து விட்டாள்.
மெல்ல அங்கிருந்து மக்கள் குடியிருப்புகள் இருக்குமிடத்தை தேடி நடத்து சென்றாள். கும்மென்ற இருட்டு ஆங்காங்கே சில மெர்குரி விளக்குகள் மட்டும் மேலிருந்து வெளிச்ச மூட்டியது. அவ்வப்போது சில வாகனங்கள் மட்டும் கடந்து சென்று கொண்டிருந்தது. சிறிது தூர நடைக்குப்பிறகு பின்னால் ஒரு சலசலப்பைக் கேட்டாள். திரும்பி பார்த்ததும் சற்று கலக்கமடைந்தாள். நடுத்தர வயதைச் சேந்த இருவர் அவளை பின்தொடர்வது போன்று நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடி போதையில் இருப்பதை எளிதாக புரிந்து கொண்டாள். பிறகு நடையில் வேகம் கூட்டி முன்னே சென்று கொண்டிருந்தாள். அவர்களும் அவளுக்கு ஈடுகொடுத்து பின்னால் நடந்தனர். சுற்றியெங்கிலும் வேறு ஆள் நடமாட்டமில்லை. இருவரும் அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டே வருவது அவள் காதிற்கு எட்டியது.
YOU ARE READING
ஓர் இரவு பயணம்
Mystery / Thrillerஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்த...