அன்றே சுபாவிடமிருந்து அபிக்கு மெஸேஜ் வந்தது...
சுபா: ஹாய்
அபி: ஹாய்..
எப்படி இருக்குறே மா??சுபா: நல்லா இருக்கேன்..
அபி: என் மச்சான் எப்படி இருக்குறான்??
சுபா: அதை நீங்க தான் சொல்லனும்..
அபி: ஹேய்...அவன் என் கிட்ட பேசி எத்தனை நாள் ஆச்சி தெரியுமா??
உன் கிட்ட தானே டெய்லி கடலை போடுவான்(😝😝)சுபி: ஹ்ம்ம்...நாங்க பிரிஞ்சிட்டோம்...
அபி: ஓஹ்.. .எப்ப பிரிஞ்சீங்க...
எப்படி பிரிஞ்சீங்க..
(ஆர்வமா இருக்கே)சுபா: அது ஒன் மன்த் கிட்ட ஆச்சி...
அவன் என்னை எதுக்கெடுத்தாலும் சந்தேகம் படுறானு பிரிஞ்சிட்டேன்..
இப்ப அவன் கிட்ட பேசனும் போல இருக்கு..பட் என் நம்பர ப்ளாக் பன்னி வச்சிக்கிறான் போலே...
நீங்க தான் எங்களை சேர்த்து வைக்கனும்...
ப்ளீஸ்...அவன் இல்லாமல் இருக்க முடியாது...
😭😭😭😭அபி: சரி...ஃபீல் பன்னாதே...நான் பேசி பார்க்குறேன்..
சுபா: ஹ்ம்ம்...ஓகே மா...
அட போங்கயா...என் வாழ்க்கையே அந்தரத்தில தொங்குது...என்னை எப்படி காப்பத்தனும்னே எனக்கு தெரியல...என்னையும் சில ஜீவன்கள் நம்பி பஞ்சாயத்துக்கு கூப்பிடுதுங்க...சரி...போய் தான் பார்ப்போமே என அபி மனதில் நினைத்துக் கொண்டாள்...
இப்பொழுதுலாம் சுத்தமாக அக்ஸர்க்கு பதில் அனுப்ப அபிக்கு விருப்பம் இல்லாமல் போனது...
என்ன செய்யலாம்...எப்படி மெஸேஜ் பன்னாம தப்பிக்கிறது என யோசித்தவள்..
வாட்ஸ் ஆப் இல் ப்ளு டிக் காட்டாத படி செட் செய்து... லாஸ்ட் சீனை ஹைட் செய்து விட்டு... நோடிஃபிகேஷனையும் ஆஃப் செய்து விட்டாள்...அவன் பார்க்கும் போது சீக்கிரம் தூங்கிட்டானு நினைச்சிக்கட்டும் என விட்டு விட்டாள்...
இதற்கிடையில் ஒரு சில பதில் மட்டும் அனுப்பினாள்...இவன் எதுக்கு மறுபடியும் கால் பன்றான் என அழைப்பை ஏற்றவள்...
YOU ARE READING
மனசெல்லாம் (முடிவுற்றது)
Non-Fictionஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)