35

2.6K 142 196
                                    

வெகுநேரமாக தூக்கம் இல்லாமல் அந்த பக்கம் இந்த பக்கம் என திரும்பி திரும்பி படுத்தவள் ஒரு கட்டத்தில் தூங்கியும் போனாள்..

ஹேய்...அபி... எந்திரி மா...டைம் ஆச்சி என அவளை போட்டு உலுக்கினான் அர்ஷா...

தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டு இந்த நேரத்தில நம்மல யாரு எழுப்புறா.... இப்ப தானே தூங்குனோம் என அபி யோசித்து கொண்டிருக்க...அர்ஷா அபியின் முடியை களைத்து கொண்டிருந்தான்...

திடீரென பயத்தில் ஆஆஆஆஆ வென கத்த வர...வேகமாக வாயை பொற்றியவன்...ஏன் டி கத்துறே...வெளியே கேட்றாம என அர்ஷா கூற... அப்பொழுது தான் தங்களுக்கு திருமணம் ஆனது நியாபகம் வந்து சுற்றி முற்றி பார்த்தவள்... அர்ஷாவை முறைத்தாள்...

ஏன் இப்படி பன்னி வச்சிக்கிறா என அபி கேட்க...எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் என அர்ஷா கூறவும்...முறைத்து கொண்டிருந்தாள்...

ஹேய்...சும்மா சும்மா முறைக்காதேடி...உன் பாட்டி இருக்குறதுலேயே ரொம்ப அறிவாளி...நாம்ம வெளியே போனதும் வேகமா நம்ம ரூம்க்கு வந்து பார்க்கும்...இப்படி நீட்டா இருந்தா உண்டு இல்லைனு பன்னிரும்...அது தான் இந்த கட்டிக்குற பூவைலாம் பிச்சி போட்டு...பெட்ஷீட்ட கசக்கி போட்டுட்டு...ஒரு பிள்ளோவ தூக்கி கீழே போட்டேன்...எப்படி?? என புருவத்தை தூக்கி காட்டி அர்ஷா கேட்கவும்...உன் மூஞ்சி மாதிரி இருக்கு என அபி கூற...அவ்வளவு கசங்கியா இருக்கு என் மூஞ்சி என சீரியஸாக அர்ஷா கேட்கவும்... அபி சிரித்து விட்டாள்...

ஹப்பா...என் டார்லிங் ஒரு வழியா சிரிச்சிட்டா என கூறியவனிடம்...சரி...எதுக்கு என் முடியை களைச்சா என கேட்க...திருதிருவென விழித்தவன்...நீயும் நீட்டா இருக்க கூடாது பேபி என முகத்தை மூடி கொண்டான் அர்ஷா...

சீச்சீ என முறைத்தவளை அசடு வழிந்த படி பார்த்தவன்...அவள் சுதாரிக்கும் முன் கண்ணத்தில் முத்தம் பதித்து தள்ளி போய் நின்று...சாரி அபி...சாரி...இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ்லாம் அப்படி இப்படினு கேள்வி கேட்பாங்க...நிறைய பொய் சொல்ல வேண்டி வரும்...அது தான் நடந்துச்சினு ஒரு வார்த்தை மட்டும் சொன்னாலும் உண்மையான வார்த்தையா இருக்கும்லே என அர்ஷா கூறவும்...அருகில் இருந்த எல்லாத்தையும் எடுத்து அர்ஷாவின் மேல் அபி வீச...பாத் ரூமில் புகுந்து கொண்டான்...

மனசெல்லாம் (முடிவுற்றது)Where stories live. Discover now