சரோ மீனு இருவரும் காபிஷாப் சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர்... அங்கே ஷாலு இவங்களுக்கு முன்பே ஹாலில் அமர்ந்திருந்தாள்...
என்ன ஷாலு பிராக்கடிஸ் லாம் முடிஞ்சிருச்சா? என மீனு கேட்க
என்ன பிராக்டிஸ்? டேய் அண்ணா நீ அன்னிய கூப்பிட்டு வரேன்னு சொல்லிருந்தா? நான் வீணா உன் ஆஃபீஸ் வரைக்கும் வந்திருக்க மாட்டேன் ல... அப்புறம் அண்ணி நீங்களாச்சும் ஒரு கால் பண்ணி சொல்லிருக்கலாம்ல?
அச்சச்சோ சரோ இவள மறந்துட்டியே? நல்லா மாட்ன... என தனக்கு தானே சரோ சொல்லிக்கொள்ள
என்ன ஷாலு சொல்ற? நீ தான எனக்கு கால் பண்ணி உனக்கு பிராக்டிக்ஸ் இருக்குன்னு என்னை உங்க அண்ணிய கூப்டு வர சொன்ன? அதுக்குள்ள மறந்துடியா?
நான் எப்படா அப்டி சொன்னேன்?
ஏண்டி நீ சொன்ன என ஷாலுவை பார்த்து கெஞ்சி சரோ கேட்க
ஓ இது உன் வேலையா? என மனதினுள் நினைத்து கொண்டு ஆமா ஆமா அண்ணி நான் மறந்துட்டேன்... அப்புறம் காலையிலையும் சீக்கிரம் போகணும் அதனால நீங்க அண்ணா கூடவே போயிடுங்க...
ம் சரி ஷாலு... ஆனா ?
ஆனா லாம் சொல்ல கூடாது ... நீங்க போறீங்க... உங்க ஹஸ்பண்ட் கூடாதான போறீங்க?
ம் சரி என மீனு சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள்...
தேங்க்ஸ் ஷாலு... என சரோ சொல்ல
டேய் ஏன்டா? உன் பொண்டாட்டிய கூப்டு போறதுக்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டுட்டு இருக்க? நீ எல்லாம் இன்னும் வளரனும் தம்பி...
சரிங்க அக்கா...
மேலே மீனு சரியான இடியட்... ஒரு பொய்ய கூட ஒழுங்கா சொல்ல தெரியல? இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது?
ஏய் அவன்தான் பொய் சொன்னானா? நீ சொல்லலையா? என அவள் மனசாட்சி கேட்க?
நான் என்ன பொய் சொன்னேன்... ஷாலு உன்னை கூப்பிட வரேன்னு உனக்கு மெஜேஜ் பண்ணுனால? அப்புறம் என்னமோ அவன் சொன்னத நம்பி அவன்கூட வந்த மாதிரி ஸீன் போடற?
YOU ARE READING
நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
Romanceகண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின்...