சரோ மீனுவின் மடியிலேயே தூங்க. .. மீனு அவனை எழுப்ப மனமின்றி அப்படியே சாய்ந்து தூங்கினாள்... நள்ளிரவில் தீடீரென ஏதோ சத்தம் கேட்டு விழித்தவன் மீனுவை பார்க்க அவள் அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள். .. ஐயோ அப்படியே தூங்கிட்டேனா? என்னமோ சொல்லணும்னு சொன்னாலே ஏதோ ஸ்கூல் ப்ராஜெக்ட் அப்டின்னு அப்புறம் கனவுல அவ என்ன கொஞ்சுன மாதிரி இருந்திச்சி...ஐயோ சரோ உனக்கு இதே வேலையா போச்சி. . இப்போ அவ என்ன சொல்ல வந்தான்னு எழுப்பியும் கேக்க முடியாது. . சரி காலையில பேசிப்போம். .. என ஒரு முடிவெடுத்தவனாய் மீனுவை பார்த்தான்...
தன்னவனுக்காக அசையாது வெகு நேரம் சாய்ந்து படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அவன் காதல் கொண்ட மனம் அவள் அழகை விழிகளால் ரசிக்க தொடங்கியது. .. மெதுவாக அவளை விட்டு எழுந்தவன் தன்னவளை பூ போல் தன் மடியில் சாய்த்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான்... மெதுவாக அவள் தலையை வருடியவன் அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை அழித்து அடுத்ததாக கன்னத்திற்கு நகர...டேய் இது தப்பு. .. கண்ட்ரோல் சரோ...
ஏய் பொண்டாட்டி நான் என்ன அவ்ளோ அதிஷ்டக்காரனா? நான் எதுவுமே பண்ணாம எனக்கு நீ கிடைச்ச பொக்கிஷம்... அதனாலையோ என்னமோ அடி மனசுல ஒரு பயம் இருந்திட்டே இருக்கு... அது ஏன் னு தெரில... உன்னை பார்த்த அந்த செகண்ட் டே என் மனச மட்டும் இல்ல என் உசுரையும் உன்கிட்ட குடித்திட்டேன்.. நீ இல்லன்னா இந்த சரோ இல்ல. .. என்ன சரோ வர வர ஓவர் செண்டிமெண்ட் டா போயிட்டு இருக்க? இது உன் கேரக்டர் லயே இல்லையே என அவன் மனம் அவனை நச்சரிக்க...
இவன் ஒருத்தன் நா ஒரு ரெண்டு செகண்ட் செண்டிமெண்ட் டா பேசிட கூடாதே உடனே வந்து ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பியே.. பர்ஸ்ட் நீ போடா. .. நான் என் பொண்டாட்டி கிட்ட கொஞ்ச பெர்சனல்லா பேசணும்...
நீ ரொம்ப நாளா பேசிட்டே தானடா இருக்க ? புதுசா வேற என்ன பண்ண போற ? என அவன் மனம் அவனை கலாய்க்க..
ம்... ஹஸ்பண்ட் அன்ட் ஒயிப் குள்ள ஆயிரம் இருக்கும்... நீ எதுக்கு நடுவுல?
YOU ARE READING
நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
Romanceகண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின்...