உணர்வாயா என் காதலை ஒருமுறை...

65 7 4
                                    

என்ன இது மாயா வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா அவளோட குழந்தை அபிமன்யு அந்த குழந்தைக்கு ஹார்ட் பிராப்லம் என்று நினைத்தவன் தூங்காமல் இரவு முழுவதும் உறக்கத்தைத் தொலைத்து விட்டு அமர்ந்திருந்தான்.

மறுநாள் காலை தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றான். செல்லும் வழியில் அந்த பள்ளியில் மாயா தனது மகன் அபிமன்யுவை விட்டுச் செல்வதைக் கண்டவன் டிரைவரை கிளம்பச் சொல்லி விட்டு அவளருகில் சென்றான். அவள் அங்கு பிரசாந்தை எதிர்பார்க்கவில்லை.  சார் என்றவளிடம் நாம பேசனும் தானே அதான் ஆபிஸ்ல வேண்டாமே என்றவன் அவளுடன் பீச்சிற்கு சென்றான்.

ஓரிடத்தில் மர நிழலில்  அமர்ந்தனர் இருவரும். சொல்லுங்க மாயா ஏதோ சொல்லனும்னு சொன்னிங்களே என்றவனிடம் எனக்கு நீங்க ஒரு நல்ல ப்ரண்ட் அதனால தான் சொல்கிறேன் என்றாள். அர்ஜுன் என்னோட ஹஸ்பண்ட் என்றவள் எங்களோடது ஒரு வித்தியாசமான காதல் கதை சார். அர்ஜுனும், நானும் கான்ட்ராக்ட் லவ்வர்ஸ் என்றாள். கான்ட்ராக்ட் லவ்வர்ஸா அது எப்படி தெளிவா  சொல்லுங்க என்றவனிடம் தன்னுடைய காதல் கதையை சொல்ல ஆரம்பித்தாள் மாயா.

சில வருடங்களுக்கு முன்....

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னைச் சேரும்...

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
உன்னுயிர் சுவாசம் எனதாகும்...

உன் மூச்சிலிருந்து என் மூச்சை
எடுத்து நான் வாழ்ந்து கொள்கிறேன்
அன்பே..

நீ வேனும்டா என் செல்லமே
நீ வேனும்டா என் செல்லமே...

என்று அர்ஜுனின் போட்டோவை வைத்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள் மாயா. என்ன மாயா அர்ஜுன் உன்னை திரும்பி கூட பார்க்கிறது இல்லை ஆனாலும் இவ்வளவு காதலா என்ற தோழி திவ்யாவிடம் அவன் திரும்பி பாக்கலைனா என்னடி உனக்கு தெரியுமா காதல்னா கொடுக்கிறது எடுக்கிறது இல்லை. நான் அவனை அவ்வளவு லவ் பண்ணுறேன் என்றாள் மாயா.

உணர்வாயா என் காதலை ஒருமுறை..Where stories live. Discover now