👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🫰🏼பகுதி 3
காமினி - சொல்லுடி... என்ன காதலா..!?
தியாழினி - காதலா..ன்னு எல்லாம் தெரியல காமு.... ஆனா தீரனை பார்க்கணும்.. அவர் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும் ....
காமினி - ம்...என்ன.. I💜U சொல்லனுமா...??
தியாழினி - ப்ச்... போடி... அது இல்ல.... உன் சித்தப்பாவோட கடைசி ஆசை ஒண்ணு இருக்கு... அத பற்றி நான் தீரன் கிட்ட பேசணும்....
காமினி - என்ன...!?உன் அப்பாவா...?
தியாழினி - ம் அப்பா தான்.....அவரால தான் நான் தீரன் மேல feel ஆகிட்டேன்....
காமினி - இன்னா feellu....ஆளை பாரு..
தியாழினி - ஏய் போடி...என் feelings உனக்கு புரியல.... போ நான் உன்கிட்ட பேச மாட்டேன் போ......
காமினி - ஆமா... யாரு அந்த தீரன்..? உனக்கு எப்படி அவன் பழக்கம்...? சித்தப்பா என்ன சொன்னாரு..?
தியாழினி - அவ...ரு..
காமினி - ஏய் இரு இரு.... Pub ல நான் நமக்கு appointment வாங்கி இருக்கேன்.... நீ இப்போ தேவையில்லாததை எல்லாம் பேசி நேரத்தை வீணாக்காத...சொன்ன நேரத்துக்கு போகலைனா ரத்தன்க்கு பிடிக்காது... நம்ம உன் கதையை பற்றி அப்புறமா பேசிக்கலாம் வா......
என்றவள்.... தன்னிடம் இருக்கும் ஒரு அரைகுறை ஆடையை எடுத்து தியாழினி கையில் திணித்தாள்.... அந்த துணியை அருவருப்பாக பார்த்த தியாழினி...
ஐய..... என்னால இந்த கிழிந்த துணியை எல்லாம் போட முடியாது.... நான் எப்பவுமே பாவாடை தாவணி தான் போடுவேன்... ஏதோ இப்போ நீ சொன்னியேன்னு தன் இந்த ஊருக்கு வரும் போது சல்வார் போட்டுக்கிட்டு வந்தேன்.... என்னால இதெல்லாம் போட முடியாது... நான் இதே டிரஸ்ல வரேன்...
என்று தியாழினி சொன்னதும்... தலையில் அடித்து கொண்ட காமினி.. அன்றைய தினம் மாலை நேரம் தியாழினியை அழைத்து கொண்டு Pub க்கு சென்று தீரத்தனை சந்திக்க முடிவு செய்தாள்...