👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 13
காமினியும் தியாழினியும் ஒரு வழியாக தீரத்தன் வீட்டில் இருந்து கிளம்பி.... காமினி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.....
காமினியின் வீட்டுக்கு வந்த பிறகும்.... தியாழினியின் மனமோ நிறைய சஞ்சலங்கள் தோன்றும் விதமாக இருந்தது...
என்ன தியா...ஏன் ஒரு மாதிரி இருக்க....
என்று காமினி கேக்க..ப்ச்... நான் ரொம்பவே குழப்பத்துல இருக்கேன்.... அத எப்படி சொல்லுறதுன்னு தெரியல..... என்று தன் குழப்பதை சொல்ல வார்த்தை தெரியாமல் தியா தடுமாற...
அதே சமயம்... காமினி வீட்டின் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு.... அவள் கதவை திறக்க.... வாசலில் மளிகை பொருளுடன் நின்று இருந்தான் தீரத்தன்....
டேய்.... நீயா... வா வா.. உள்ள வா.. come in... என்று காமினி அழைக்க...
சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்த தீரத்தன்...என்ன தியா.... இப்போ நீ ஓகே வா.... என்று கேக்க...
தீரனை அங்கே சற்றும் எதிர்பார்க்காத தியாவின் கண்கள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.....
ஒ... அப்போ தியா ஓகே வா nnu பார்க்க தான் சார் காலையிலேயே வந்து இருக்கீங்களோ... என்று காமினி கிண்டலாக கேக்க..
Off course..... தியா knjm confuseஅ இருக்குற மாதிரி தெரிஞ்சுது... அதுவும் இல்லாம நேத்து தியா purchase பண்ண things எல்லாம் என் காருலேயே இருந்ததா... So அதையும் கொடுத்துட்டு... அப்படியே தியாவையும்...
என்றவன் அவளை அர்த்தமாக பார்த்தான்..ஓகே ஓகே.... ரொம்ப முன்னேற்றம் தான்.... சரி டா... நீங்க பேசிகிட்டு இருங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்...
என்ற காமினி அங்கிருந்து நகர்ந்ததும்....
தீரன்...தியாவின் அருகில் வந்தவன் அவளையே உற்று பார்த்து கொண்டு இருந்தவனின் பார்வையில் பாவை இவள் சில நொடிகள் இதயம் சிலிர்த்து போனாள்....என்ன தியா...நான் வந்தது உனக்கு பிடிக்கலையா... என்று தீரன் கேட்டதும்...