👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 18
ஒரு வாரம் கடந்தது.....
இந்த ஏழு நாட்களும் கமலேஷ் தான் தீரத்தனின் VT கம்பெனியை மேற்பார்வை பார்த்து வந்தான்....தியாழினி விடிந்ததும் முதல் வேலையாக தீரத்தன் பங்களாவிற்கு வருவதை கடமையாக கருதியவள்... பொழுது சாயும் முன்பு காமினியின் வீட்டுக்கு சென்று விடுவாள்.....
இந்த ஒரு வார காலமும்.... கமலேஷ் அனாவசியமாக தீரத்தனை சீண்டி பார்க்காமல்.... அவன் வேலையை பார்த்து கொண்டு இருக்க..... பொம்மிக்கு தான் கமலேஷின் இந்த திடீர் மாற்றத்தை எண்ணி தலை வெடித்தது....
காமினி கைபேசி மூலமாகவும்..... தியாழினி மூலமாகவும் தீரத்தனின் நலனை பற்றி கேட்டு தெரிந்து கொண்டவள்.... கமலேஷை பார்த்து ஒரு வார காலமாகி இருந்தது....
அன்றைய தினம் சனிக்கிழமை இரவு... கமலேஷ்.. தீரத்தனின் பங்களாவிற்கு வராமல்... தன்னுடைய வீட்டிற்கு சென்றவன் மனதில் காமினியின் நினைவுகள் மட்டுமே நிறைந்து இருக்க....
குளியல் அறைக்குள் சென்று shower ஐ திறந்து.. கொட்டும் தண்ணீரில் தன் உடல் நனைய நின்று இருந்தவனின் உடம்பின் சூடு அணைய மறுத்தது....
குளியல் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தவன்... ஒன்றும் பாதியுமாக தன் உடலில் இருந்த தண்ணீரை துடைத்து .... ஒரு t-shirt டையும் pant டையும் எடுத்து மாட்டிக்கொண்டு... Channel Body spray வை உடல் எங்கும் பரவும்படி அடித்து கொண்டவன் .. ஷூவை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பி தன் காரை காமினி வீட்டை நோக்கி விரட்டினான் ......
சில நிமிடமிகளில் அவள் வீட்டு வாசலை சென்றடைந்தவன்... காரை விட்டு கீழே இறங்காமல் காமினியை கைபேசி மூலமாக அழைத்தவனின் அழைப்புக்கு பதில் தராத காமினி.... தன் வீட்டில் இருந்து வெளியே வந்தவளை காரில் அமர்ந்தபடி புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்த கமலேஷ்....
தன் காரில் இருந்து கீழே இறங்கி... காமினியை நோக்கி செல்ல....
கமலேஷ் அவளை நெருங்கும் முன்பு... மின்னல் வேகத்தில் வந்த காமினியின் மேனேஜர் ஸ்டீபனின் பைக்கில் ஏறிய காமினி ...ஜோடியாக அங்கிருந்து கிளம்ப.... இதை சற்றும் எதிர்பார்க்காத கமலேஷ் அதே இடத்தில் ஜடம் போல நின்று இருந்தான்...