என்ன சொல்ல போறான்??

691 19 7
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 20/21

கமலேஷ் - அப்போ நீ தியாவை காதலிக்கல... அப்டி தானே...

தீரன் - ம்ஹூம் இல்ல....நான் தியாவை காதலிக்கல....

என்று தீரத்தன் சொல்ல.... அதேசமயம் கமலேஷின் வீட்டு வாசல் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டு கமலேஷ் வீட்டு வாசல் கதவை திறக்க.... அங்கே வாசலில் தியா கண்களில் கண்ணீரோடு நின்று இருந்தவளின் கூந்தலை கெட்டியாக தன் கைப்பிடியில் பிடித்து கொண்டு தீரத்தன் கண் எதிரில் வாசுதேவன் நின்று இருக்க.... கமலேஷும்.... தீரத்தனும் கொலை வெறியோடு வாசுதேவன் முன் நின்று இருந்தனர்...

தியாழினி - தீரா..... என்றவளின் கண்ணில் கண்ணீர் நிரம்பி இருந்தது.....

ஓ.... நீங்க ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா... டேய் சுடல.... நம்ம ஆளுங்கள போன் போட்டு வர சொல்லி .... இந்த கமலேஷை அடிச்சு போட சொல்லிட்டு..... ரத்தனை வண்டியில ஏத்த சொல்லுடா....
என்று வாசுதேவன் கர்ஜித்தவனின் கைப் பிடியில் இன்னமும் தியாழினியின் கூந்தல் சிக்கி இருக்க.....

ஆ....வலிக்குது... Pls விடுங்க.... என்று மேலும் அழுதாள் தியாழினி...

இங்க பாருங்க.... உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை..... தியா மேல இருந்து கையை எடுங்க....... இல்ல... அப்பான்னு கூட பார்க்க மாட்டேன்.... மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன்.... என்ற தீரன்....வாசுதேவன் பிடியில் இருக்கும் தியாழினியை நெருங்கி சென்றான்...

டேய் ரத்தா அங்கேயே நில்லு....கிட்ட வந்த... பெத்த மகன்னு கூட பார்க்க மாட்டேன்.... உன்னை நானே கொலை பண்ணிடுவேன் சொல்லிட்டேன்.... என்று வாசுதேவன் கோவத்தில் கனலை கக்கினான்...

என்ன... தீரன் உங்க மகனா... தீரா இங்க என்ன நடக்குது.... இவரு உங்க அப்பாவா..... அப்போ நீங்க தான் ரத்தனா... ஏன் என்கிட்ட இப்படி பொய் சொல்லி நாடகம் ஆடுனீங்க.....என்று கண்கள் கலங்கியப்படி தியாழினி கேக்க....

ஓ மை கடவுளே.... இந்தா மா தம்பி பொண்டாட்டி..... இங்க இப்போ ஒரு action பிளாக் நடக்க போகுது..... அத முடிச்சிட்டு நம்ம ஆற அமர FB பற்றி பேசிக்கலாம்... So இப்போ நீ கொஞ்ச நேரம் இப்படி வந்து உக்காந்து ரெஸ்ட் எடு......

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now