என்ன 🤭மாத்திர

902 23 1
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 10

தீரன் - அப்போ நீ என்னை பார்த்து,என்கூட பழக தான் இந்த ஊருக்கு வந்தியா..

தியா - ஆமா தீரா... நான் எங்க ஊரை விட்டுட்டு வந்ததுக்கு காரணம்...

என்று தியா உண்மையை சொல்ல வரும் முன்பு.... "அம்மா" என்று கத்திய படி...
தேங்காய் சில் தியாழினியின் நெற்றி பொட்டில் பட்டு.... அவள் துடிதுடித்து அதே இடத்தில் மயங்கி சரிந்தவளை பார்த்து பதறினான் தீரத்தன்....

தியா...தியா இங்க பாரு.... என்று பதறியவன்.... அவள் கன்னத்தை தட்ட...கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் இவர்களை சூழ்ந்து கொண்ட தருணம்.... அருகில் இருந்த ஒரு பெண்மணி... தீரன் கையில் தண்ணீர் பாட்டிலை தந்ததும்...... அவன் தியா முகத்தில் தண்ணீர் தெளிக்க...... அவள் அசைவின்றி மயங்கி இருப்பதை பார்த்து பயம் கொண்ட தீரத்தன் சற்றும் தாமதிக்காமல் தியாவை தன் காரை கொண்டு அவனின் நண்பன் தேவ் கிளினிக்கு அழைத்து செல்ல.... அங்கே தியாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது....

சில நிமிடங்கள் பதற்றம் குறையாமல் மருத்துவ மனையின் வளாகத்தில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்த தீரத்தன் அருகில் வந்த அவனின் நண்பன் மருத்துவர் தேவ் ...

Dr. தேவ் - ரத்தா.... என்று அழைத்ததும்......பதற்றம் குறையாமல் தன் நண்பனின் கரங்களை பற்றிக்கொண்ட தீரன்...

ஏய்... தியா... தியாக்கு என்னாச்சு டா... என்று பதறினான்....

கூல் dude... அவங்க நல்லா இருக்காங்க nothing to worry....ஆமா யாரு அவங்க.... முதல் முறையா உன் கண்ணுல ஒரு பயம்... வார்த்தையில ஒரு அக்கறை... என்னடா... உன் காதலியா அந்த பொண்ணு.... பட் உனக்கு தான் காதல் எல்லாம் பிடிக்காதே.... என்று தீரனின் நண்பன் தேவ் சொன்னதும்..... தன்னிலை உணர்ந்த தீரன்..

கா.. காதல் எல்லாம் இல்ல... எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பொண்ணு... சட்டுன்னு மயங்கி விழுந்ததும் பயந்துட்டேன்.... இப்போ ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே...
என்று மீண்டும் தீரத்தன் அக்கறையாக கேட்டான்...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now