கழுதை காதா

833 19 5
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 8

"என்ன.....சித்தப்பாவோட கடைசி ஆசை, நீ தீரணை கல்யாணம் பண்ணிக்கணும்னா"
என்று காமினி வாயை புலந்தப்படி அறையில் இருந்து வெளியே வந்தவளை பார்த்து தியாழினி பேய் முழி முழிக்க.... அதே சமயம் செல் போனுடன் வீட்டுக்குள் நுழைந்த தீரத்தன்

என்ன காமினி ஏன்? இப்படி கத்துற....
என கேட்டுக்கொண்டே தீரத்தன் வீட்டுக்குள் நுழைந்தவன் காதில் இவர்கள் பேசியது கேட்க வில்லை என்று அறிந்து கொண்ட காமினி பெருமூச்சுடன் நிம்மதி அடைந்தாள்......

தீரத்தன் - என்னாச்சு...? ஏன்? எல்லாம் Statue போல இருக்கீங்க...

பொம்மி - அது வந்து தம்பி...

தியாழினி - தீரா.... நான் உங்ககிட்ட....நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...

என்று தன் மனதில் இருப்பதை இந்த நொடியே சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்த தியாழினி தீரனிடம் பேச முயன்றவளை தடுத்து காமினி.... அவளை அறைக்குள் இழுத்துச் சென்றவள் கதவை தாழிட்டாள்...

ஏய் காமு....என்ன நீ பைத்தியம் மாதிரி பண்ற... என் கையை விடு.. நான் போய் தீரன் கிட்ட அப்பா சொன்னதை சொல்லி... அவருடைய சம்மதத்தை கேட்கணும்... என்றவள் அறையின் வாசல் கதவை திறக்க முயன்றவளை மீண்டும் தடுத்து...

காமினி - யாருடி பைத்தியம்... நான் இல்ல நீ தான் பைத்தியம்.. ஏன்?டி.. சித்தப்பா என்னமோ சொன்னார்னு எந்த நம்பிக்கையில நீ இங்கே கிளம்பி வந்து இருக்க... உனக்கு எங்கேயாவது மூளை இருக்கா... இதெல்லாம் சொன்னா இந்த காலத்து பசங்க நம்புவாங்களா...!?

தியாழினி - எனக்கும் அந்த சந்தேகம் இருக்குது... அதனால தான் எதுவா இருந்தாலும் தீரன் கிட்டயே நேரடியா கேட்டுடலாம்னு இந்த ஊருக்கு வந்தேன்.... நான் நினைச்ச மாதிரி வந்த முதல் நாளே நான் தீரனை சந்திக்கவும் செஞ்சுட்டேன்.... இன்னும் அவர்கிட்ட இந்த விஷயத்தை பேசி அவர் சம்மதத்த கேட்டுட்டு நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் அதுக்கேத்த மாதிரி நான் என் வாழ்க்கையை மாத்திப்பேன்... அதனால இரு இப்பவே போய் நான் தீரன் கிட்ட பேசுறேன்....

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Onde histórias criam vida. Descubra agora