ரீல்ஸ் மட்டும் பாப்போம் 🤗

693 22 3
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 17

தீரத்தனின் தோளில் அரிவாள் ஆழமாக இறங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவனை கண்டு தியாழினி மயங்கி கீழே விழுந்ததும்.....

தீரத்தன் ஆபீஸ் வாசலில் நின்று இருந்த Staffs சில பேர் அங்கே நடந்த சம்பவத்தை பார்த்து பதறிய நிலையில் தீரத்தனையும் தியாழினியையும் மருத்துவ மனையில் சேர்த்தனர்.....

விஷயத்தை கேள்விப்பட்டு காமினியும் கமலேஷும் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல.... அங்கே தீரத்தனுக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்க... தியாழினி இன்னுமும் மயக்கத்தில் தான் இருந்தாள்...

"தீரத்தனை ரத்த வெள்ளத்தில் மருத்துவ மனையில் சேர்த்தோம்" என்று அங்கு இருந்த நபர்கள் காமினியிடம் சொன்னதும்.. கமலேஷின் கண்கள் கோவத்தில் சிவந்தது....

இந்த அசம்பாவிதத்தை கேள்விப்பட்டு பொம்மியும் மருத்துவமனைக்கு வர... "தீரத்தனின் நிலை என்ன" என்று அறிந்து கொள்ள முடியாமல் அனைவரும் கவலையில் இருந்தனர்...

"டாக்டர் என்ன சொல்லுறாரு...? என் புள்ளைக்கு ஒண்ணும் ஆகாது இல்ல"... என்று வேலைக்கார பெண்மணியாக இருந்தாலும் பொம்மி கண்ணீர் சிந்தி தீரத்தனுக்காக அன்னை ஸ்தானத்தில் அழுது கொண்டு இருந்தாள்..

" அழாதீங்க பொம்மு..... ரத்தனுக்கு எதுவும் ஆகாது.. pls அழாதீங்க " என்று காமினி... பொம்மிக்கு ஆறுதல் சொல்ல... கமலேஷ் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்...

"Patient க்கு O neg.blood தேவைப்படுது... நீங்க arrange பண்ண முடியுமா"... என்று Nurse கேக்க...

"எனக்கும் அதே Blood குரூப் தான்... நான் blood தரேன் " என்று கமலேஷ் தானாக முன் வந்து ரத்தம் தர சம்மதித்தவனை பார்த்து பொம்மி ஆச்சிரியம் அடைந்தார்...

ஒரு பக்கம் தீரத்தனுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டு இருக்க...
சில மணி நேரம் கடந்த நிலையில் ...
தியாழினி மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள்...தீரத்தனின் நிலை என்ன என்று எண்ணி கண்கள் கலங்கியவள்... அவள் இருந்த சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தவளை பார்த்து காமினி ஓடி போய் கட்டிக்கொண்டாள்..

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now