மறுநாள் அனைவரும் ஒன்றாக பொங்கல் கொண்டாடினர்..
அதிகாலையே அனைவரும் எழுந்து தயாராகினர்..
மது, சில்க் காட்டன் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள்..
கார்த்திக் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..சந்தியா, மது, அர்ச்சனா, சுஹாசினி, கமலினி, நிரஞ்சனா ஆகியோர் ஒரு கூட்டணியாகவும்
ப்ரசன்னா, சித்தார்த் இருவரும் மற்றொரு கூட்ணியாகவும் பிரிந்து முன் வாசலில் ரங்கோலி கோலமிட்டனர்..
யாருடைய கோலம் சிறந்தது என்று தேர்வு செய்யும் பொறுப்பை கார்த்திக் ஏற்றான்..
பெரியவர்களும் அவர்கள் விளையாட்டில் பார்வையாளராக இருந்ததோடு கமெண்ட்ஸும் செய்தனர்..
"கார்த்திக்.. பாவம் பசங்க.. இரண்டு பேர் மட்டும் கஷ்டப்பட்டு போட்றுக்காங்க தீர்ப்பு அவங்களுக்கு சாதகமா சொல்லிடுப்பா.. " என்றார் பானுமதி"கார்த்திக்.. அப்டி செஞ்ச அப்பறம் அர்ச்சனா கோபிச்சுக்குவா பாத்துக்கோ.." என்றார் அபிராமி
'ஹய்யோ.. நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா மது கையால அடிவாங்க வைக்காம விடமாட்டாங்க போல..!! ஜட்ஜ் வேலைக் கூட இவ்ளோ கஷ்டமா இருக்கே..'😣😣
என்று எண்ணினான் கார்த்திக்"ரெண்டு டீமும் equal points.. so.. game draw.." என்று கூறி தப்பித்தான்..
அடுத்து இரண்டு அணியினரும் பொங்கல் வைக்க தயாராகினர்..
பெரியவர்களும் இணைந்துக் கொண்டனர்..இளம் பெண்களோடு மூத்த ஆண்கள் இணைந்து முதல் அணியினராகவும்..
இளம் ஆடவர்களோடு மூத்த பெண்கள் சேர்ந்து இரண்டாம் அணியினராகவும்..
போட்டி போட்டனர்..இதில் கார்த்திக் அவனது தந்தை இருவரும் தீர்ப்பு கூறும் பொறுப்பேற்றனர்..
முதலில் பொங்கியது இரண்டாம் அணி பொங்கல் ஆனால் சுவையில் வெற்றி பெற்றது முதல் அணியினர்..
எனவே இதுவும் drawவில் முடிந்தது..
'அப்பாவும் பையனும் நாட்டாமை கேரக்ட்டர மட்டும் பண்றாங்க..'என்று எண்ணி சிரித்தாள் மது..