காலை மணி 5:30..
கார்த்திக் மதுவை தன் தோள்மேல் சாய்த்துக் கொண்டு அவள் தலை முடியைக் கோதி கொண்டிருந்தான்..
மது கண்மூடி அவன் மேல் சாய்ந்து அவனது கழுத்தை கட்டிக் கொண்டு அவன் செய்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.."ஹம் தேரே பின் ab
ரெஹெ நஹி சக்தே
தேரே பினா க்யா வஜூது மேரா..
துஜ்ஸே ஜுதா அகர்
ஹோஜாயேங்கே
தோ ஹுத்ஸேஹி
ஹோஜாயேங்கே ஜுதா..
க்யூன்க்கி தும் ஹி ஹோ..
Ab தும் ஹி ஹோ..
Zindagi ab தும் ஹி ஹோ.."என்று அவள் காதோரம் பாடினான்..
மீண்டும் அதே பாடினான்.. மீண்டும் மீண்டும் அதே பாடினான்..
'என்ன அதையே திரும்ப திரும்ப பாடுறாரு' என்று மது கண் திறந்து பார்த்தாள்..
கார்த்திக் அருகில் இல்லை.. பாடியது அவளது மொபைல் ரிங்ட்டோன்..
' ஓ.. கனவா..?' கனவு கலைந்த கோபத்தில் ஃபோனை எடுத்து,
"ஹலோ.. " என்றாள் எரிச்சலுடன்"Darling.. தூக்கத்ல disturb பண்ணிட்டேனா..?" என்று கேட்ட கார்த்திக் குரலில் பரவசமானாள் மது..
"ஹே.. என்ன இவ்ளோ காலைல ஃபோன் பண்ணியிருக்கீங்க..?"
"நீ தூங்கு நான் அப்றம் பேசறேன்.."
"இல்லல்ல.. உங்க கூட தான் dreamல இருந்தேன்.. அந்த sweet dreamம வேற யாரோ டிஸ்ட்டர்ப் பண்ணிட்டாங்கனு நெனச்சேன்.. சொல்லுங்க கார்த்திக்.."
"சும்மா தான் call பண்ணேன்.. உன்கூட பேசனும் போல இருந்துச்சு.. நாளைக்கு மார்னிங் உங்க வீட்டுக்கு இன்விட்டேஷன் குடுக்க வர்றோம்.. "
"ஹை.. நிஜமாவா.. இப்போவே உங்கள பாக்கனும் போல இருக்கு.. its ok.. நாளை வரைக்கும் வெய்ட் பண்றேன்.."
"ம்.. ok.. நீ dream continue பண்ணு செல்லம்.. call u later.."
" மிஸ் யூ.."
"I too miss uடா.."
சில மணி நேரங்கள் கழித்து.. மது வீட்டின் காலிங் பெல் ஒலித்தது..